Tuesday, July 24, 2012

தமிழ் வளர்த்த தருமையாதீனம் 8

                                      ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள்


சிவப்பிரகாச சுவாமிகள், காஞ்சிபுரத்தில் இறைவன் திருவருளால்


பிறந்தார். சிறுவயதிலேயே தந்தையை பறிகொடுத்துவிட்டதால்

தனது தமையன் வேலாயுதம், கருணைப்பிரகாசம்,தமக்கை

ஞானாம்பிகை ஆகியோருடன் திருவண்ணாமலைக்கு

வந்து சேர்ந்தார். தனது தந்தையின் குருவான குருதேவரை தரிசித்து. அவருடனே தங்கியிருந்து கல்வி கற்றார். சிவஞானத்தில் பெருநிலை அடையப்பெற்ற குருதேவரிடம் தீட்சை பெற்றார்.

சதா சிவசிந்தனையிற் திளைத்திருந்தார், சுவாமிகள். திருவண்ணாமலை கிரிவலத்தின் பெருமையை தன் உள்ளுணர்வால் உணர்ந்து புறப்பட்டார்.





ஒவ்வொரு முறை வலம் வரும் பொழுதும் அருணாச்சலேஸ்வரர் மேல் பாடல் பாடி-அன்றைய தினத்தில் 100 பாடல்கள் இயற்றினார்.
அதற்கு “சோண சைலமாலை” என்று பெயர். சுவாமிகள் மேலும் ஆழ்ந்த கல்வி பயில வேண்டும் என்ற ஆசையினால் தமது சகோதரர்களுடன் தென்னகப் பிரயாணம் தொடங்கினார். திருச்சிக்கருகில் உள்ள பெரம்பலூரில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்து சிவபூஜையை செய்து வந்தார்.


அங்கிருந்து திருநெல்வேலி வந்து தாமிரபரணி ஆற்றங்கரையருகில் உள்ள சிந்துபூத்துறைக்கு வந்து சேர்ந்தார்.அவ்வூரிலுள்ள தர்மபுர ஆதினத்து கட்டளை தம்பிரான் வெள்ளியம்பல சுவாமிகளுக்கு சீடனாக இருந்து கல்வி கற்க விரும்பினார்.


வெள்ளியம்பலவாணர் தருமை ஆதீனம் நான்காம் பட்டத்தில் விளங்கிய குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரியாரிடம் சிவதீட்சை பெற்றவர்,காசிக்கு சென்று குமரகுருபரரிடம் கல்வி பயின்றவர்.
அத்தகைய இலக்கண இலக்கிய செம்மலிடம் மாணாக்கன் ஆவதைப்
பெரும் பேறாகக் கருதினார் சிவப்பிரகாச சுவாமிகள்.


சிவப்பிரகாசரின் தமிழார்வத்தை அறிந்த முனிவர்- அவரின் ஆற்றலை அறிய விரும்பி “கு” என்று தொடங்கி “கு” என்று முடித்து இடையே ஊருடையான் என்று வருமாறு நேரிசை வெண்பா ஒன்று பாடுமாறு ஆணையிட்டார். சுவாமிகளும் தயங்காமல் உடனே பாடிக் காட்டினார்.
வெண்பாவைக் கேட்டவுடன் சிவப்பிரகாசரின் ஆற்றலைக் கண்டு
வெள்ளியம்பல சுவாமிகள் மிகுந்த வியப்புற்றார்.அவரை அப்படியே ஆரத் தழுவிகொண்டார்.” இத்தகைய ஆற்றல் படைத்த உமக்கா தமிழ் சொல்லித்தர வேண்டும் “ என்று கேட்டார். வெள்ளியம்பல சுவாமிகள், சிவப்பிரகாசரை தன்னுடன் இருத்திக்கொண்டு சுவாமிகளின் சகோதரர்களாகிய வேலாயுத சுவாமிகள், கருணைப்பிரகாச சுவாமிகள் ஆகிய இருவருக்கும் பதினைந்து நாட்களில் ஐந்திலக்கணங்களையும்
கற்றுக் கொடுத்தார்.

சிவப்பிரகாசரின் எண்ணம் நிறைவேறியது. மகிழ்ச்சியில் மலர்ந்தார். பெரம்பலூரில் தனக்கு காணிக்கையாக கொடுத்த முந்நூறு பொற்காசுகளை தனது குருவின் காலடியில் சமர்ப்பித்தார்.வெள்ளியம்பல சுவாமிகளோ,” இவை எமக்கு வேண்டா, அதற்குப் பதிலாக திருச்செந்தூரில் எம்மை இகழ்ந்து பேசுதலையே இயல்பாக கொண்டு திரியும் ஒரு தமிழ்ப்புலவனின் அகங்காரத்தை ஒடுக்கி எம் கால்களில் விழச் செய்ய வேண்டும் “என்றார்.

குருவின் அவாவை நிறைவேற்றும் பொருட்டு திருச்செந்தூர் புறப்பட்டார். கோவிலினுள் எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானை தரிசித்து விட்டு-வலம் வந்தார்.அப்பொழுது முனிவர் சொன்ன அப்புலவனைக் கண்டார். புலவனும், சுவாமிகளைக் கண்டு இவர் வெள்ளியம்பல
சுவாமிகளிடமிருந்து வந்தவர் என்பதையறிந்து வசை மாறி பொழிந்தான். இருவருக்கும் விவாதம் முற்றியது.

புலவன் சுவாமிகளை பந்தயத்திற்கு அழைத்தான். இருவரும்
நீரோட்டகயமகம் பாடவேண்டும் என்றும் யார் முதலில் முப்பது பாடலை பாடி முடிக்கிறார்களோ அவரே ஜெயித்தவர்- தோற்பவர் மற்றவர்க்கு அடிமையாக வேண்டும் என்றான். சிவப்பிரகாச சுவாமிகளும் சிறிதும் தயங்காது பாடி முடித்தார். ஆனால் புலவனால் ஒரு பாடல் கூட பாட முடியவில்லை-வெட்கித் தலைகுனிந்து சுவாமிகளிடம் சரணடைந்தான்.
அதற்குச் சுவாமிகள் அடியேன் வெள்ளியம்பல சுவாமிகளின் அடிமை-நீர் அவருக்கே அடிமையாதல் முறை” என்று கூறி தம் குருநாதரிடம் அழைத்துச் சென்று அவருக்கே அடிமையாக்கினார்.

வெள்ளியம்பல சுவாமிகள் அகங்காரம் கொண்ட  புலவனின் அகந்தையை அடக்கி அவனுடைய கவனத்தை பரம் பொருளிடத்தே செலுத்த வைத்து “நல்வாழ்வு-வாழ்ந்து வா” என்று கூறி அனுப்பி வைத்தார்.


குருநாதரிடம் பிரியாவிடை பெற்று தமது இளவல்களுடன்  துறைமங்கலம் வந்து, பின்னர் அங்கிருந்து வாலிகண்டபுரத்தின் வடமேற்கு திசையிலுள்ள திருவெங்கையிலே சில காலம் தங்கி சிவபூஜை செய்துவந்தார்.

வள்ளல் அண்ணாமலை ரெட்டியார் கட்டி தந்த மடத்தில் தங்கியிருந்தவாறே -திருவெங்கைக் கோவை,திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கையுலா, திருவெங்கை அலங்காரம் என்னும் நான்கு நூல்களைத் தந்தருளினார். சிவப்பிரகாச சுவாமிகள், தமது உடன்பிறந்தவர்களுக்கு திருமணம் செய்து வைத்து-அண்ணாமலை ரெட்டியாருடன் புனித பயணம்
புறப்பட்டார்.

சிதம்பரத்திற்கு வந்து, அங்கு ஆத்ம சாதனையில் தீவிரமாக இறங்கினார். அங்கு சிவப்பிரகாச விசாகம்,தருக்க பரிபாஷை, சதமணிமாலை, நான்மணி மாலை முதலிய நூலகளை செய்தருளினார்.

அங்கிருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு வந்து சிவபெருமானை தரிசனம் செய்து -சில காலம் தங்கியிருந்து விட்டு-பின்னர் காஞ்சிபுரத்திற்கு
புறப்பட்டார்கள். வழியில் சாந்தலிங்க சுவாமிகளை கண்டு அளவளாவி
மகிழ்ந்து, அவருடன் சிவஞான பாலய சுவாமிகளை தரிசிக்க புதுவை
வந்து,அங்கிருந்து பிரம்மபுரம் வந்து சேர்ந்தனர்.


சாந்தலிங்க சுவாமிகள், சிவஞான பாலைய சுவாமிகளின் பேராற்றலை -பெருமைகளை வானளாவ புகழ்ந்து கூறி, அவரைப் பற்றி ஒரு பா பாடுங்களேன் என்றார்.அதற்கு சிவப்பிரகாச சுவாமிகள்- இறைவனைத் துதிக்கும் நாவால்  மனிதனை துதியேன் என்று கடுமையாக கூறி விட்டார்.

இருவரும் அருகிலுள்ள புத்துப்பட்டு ஐயனார் கோவிலின் பின்புறம்
அன்றிரவு தங்கினர்.சிவப்பிரகாச சுவாமிகளின் கனவில் முருகப் பெருமான்ம்மயில் வாகனத்தோடு காட்சியளித்தார். நிறைய பூக்களை முருகப்பெருமான் சுவாமிகளிடம் கொடுத்து இவற்றை ஆரமாக தொடுத்து எமக்குச் சூட்டுவாய் என்றருளினார்.

காலையில் கண் விழித்ததும் சாந்தலிங்க சுவாமிகளிடம் கனவில் முருகப் பெருமான் வந்ததை தெரிவித்தார். சாந்தலிங்க சுவாமிகள்,சிவஞான பலைய சுவாமிகளுக்கு, முருகப் பெருமான் குரு.அவர் மீது பேரன்பு கொண்டு பெரும் பூஜை செய்து வருகிறார்-தேசிகர்.

சிவஞான பாலைய சுவாமிகளின் பெருமையை உணர்த்துவதற்காகவே முருகபெருமான் சிவப்பிரகாச சுவாமிகளின்  கனவில் வந்து உணர்த்தியுள்ளார்- என்று விளக்கினார். மறுநாள் சிவஞான பாலைய சுவாமிகளை இருவரும் சந்தித்தனர். தாலாட்டு, நெஞ்சு விடு தூது என்ற இரு பிரபந்தங்களைப் பாடி தேசிகர் சன்னிதானத்தில் அரங்கேற்றினார்-சிவப்பிரகாச சுவாமிகள்.

சிவஞான பாலைய சுவாமிகளும், சிவப்பிரகாச சுவாமிகளுக்கு ஞானாபதேசம் செய்தார். இருவரும் குருவின் சீடர்களானார்கள்.சிவஞான பாலைய சுவாமிகளின் சொற்படியே தன் தமக்கையை சாந்தலிங்க சுவாமிகளுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.தேசிகரிடம் விடைபெற்று, காஞ்சிபுரத்திற்கு வந்து கன்னட மொழியில் எழுதப்பட்ட விவேக சிந்தாமணி என்னும் நூலின் ஒரு பகுதியை தமிழில் வேதாந்த சூடாமணி என்று மொழிபெயர்த்தார்.மேலும் சித்தாந்த சிகாமணி, பிரபுலிங்கலீலை என்ற நூல்களை எழுதினார். திருப்பள்ளியெழுச்சி, பிள்ளைத்தமிழ் என்ற இரண்டு நூல்களைதன் ஞானாசிரியர் மேல் பாடினார்.


காஞ்சிபுரத்தை விட்டு புறப்பட்டு கூவம் என்னும் சிவத்தலத்தை
அடைந்து திருக்கூவப்புராணம் பாடி அருளினார். அங்கிருந்து புறப்பட்டு பொம்மையாபாளையத்திற்கு வந்து தன் ஞானாசிரியரை தரிசித்து லிங்கதத்துவம், அனுபவம், ஈசனின் உறைவிடம்  அவத்தைகள் போன்ற நுணுக்கமான தத்துவ விஷயங்களை தெரிந்துகொண்டார். பின்னர் விருத்தாசலம் புறப்பட்டார்.

சிவஞான பாலைய சுவாமிகள் இறைவனோடு கலந்த செய்தியை
கேள்விப்பட்டு மறுபடி பிரம்மபுரத்திற்கு வந்தடைந்தார். குருவின்
சந்நிதானத்தில் வீழ்ந்து, அழுது புலம்பினார். தம் குருவின் மீதிருந்த
அளவற்ற அன்பினால் பலமுறை வீழ்ந்து வீழ்ந்து வணங்கினார்.
பொம்மையார்பாளைய கடலோரத்தில் அமர்ந்து மணலிலே “நன்னெறி”
வெண்பா நாற்பதையும் தன் விரலால் எழுத, அங்குள்ளோர் அதை
எழுதிக் கொண்டனர்.

காலம் வேகமாக சென்றது. பிரம்மபுரத்திலிருந்து புறப்பட்டு புதுவை வந்து சிவதலங்களை வணங்கி விட்டு,நல்லாத்தூர் வந்து சேர்ந்தார்.அது ஒரு சிற்றூர்.எங்கு பார்த்தாலும் நுணா மரங்களும், கள்ளிக் காடுகளுமாக இருந்தது. அவ்வூரில் ஒரு சிவன் கோவிலும் இருந்தது. அக்கோயிலின் அருகே உள்ள நுணா மரத்தின் கீழ் அமர்ந்து தன் தவத்தை மேற்கொண்டார்.

அதிகாலையில் எழுந்து நல்லாற்றிலிருந்து புறப்பட்டு வில்லியனூர் அருகே ஓடும் அற்றில் நீராடுவார்.அங்குள்ள வில்வ இலைகளை
சிவபெருமான் பூஜைக்காக பறித்துக் கொண்டு, நல்லாற்றூருக்கு அதிகாலையிலேயே சென்று விடுவார்.


அங்கு இவ்வாறு இருக்கும் பொழுது, சிவஞான மகிமையும்அபிஷேக மாலையும் நெடுங்கழி நெடிலும், குறுங்கழி நெடிலும்,நிரஞ்சன மாலையும், கைத்தலமாலையும் சீகாளத்திப்புராணத்தில் கண்ணப்பச் சருக்கமும், நக்கீரச்சருக்கமும் எழுதினார்.

பல ஆண்டுகள் ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டிருந்தார்.தவம் முடிந்தது.தவ சித்தி பெற்றார்.சுவாமிகளின் பூஜைகள் பலிக்கத் தொடங்கின.அவருக்கு முப்பத்திரண்டு வயது வந்தது.தாம் சிவமாகும் காலம் வந்ததை உணர்ந்தார்.

புரட்டாசி மாதம- பௌர்னமி திதியில் பரம்பொருளோடு ஐக்கியமானார்.
எங்கு சுவாமிகள் சித்தி அடைந்தாரோ அங்கேயே சுவாமிகளை சமாதி வைப்பதற்காக அங்குள்ள நுணா மரம் வெட்டப் பட்டது.அந்த நுணா மரத்தின் கீழ் தான் சுவாமிகள் தவம் செய்வது வழக்கம். வெட்டப் பட்ட நுணா மரத்தை அங்குள்ள ஒரு வீட்டில் கொண்டு போய்ட்டார்கள். அக்கணமே அந்நுணா மரம் எரிந்து சாமபலாகியது.ஆனால் வீட்டிலிருந்த வேறு எந்தவொரு பொருளையும் அந்நெருப்பு தீண்டவில்லை.


சுவாமிகளின் காலம் 17-ம் நூற்றாண்டாகும்.சுவாமிகள் வாழ்ந்தது
32 ஆண்டுகள். சுவாமிகளின் நூல்களிலே ஆழ்ந்த சைவ சித்தாந்தக் கருத்துக்கள்,தெளிவான உயிர்நிலைத் தத்துவங்கள், மெய்ப் பொருளைக்
காட்டுகின்ற விரிவான தர்க்க பாஷை யாவும் மலை போல் குவிந்துள்ளன. முப்பத்திரண்டு வயதில் முப்பத்திரண்டு தெய்வீகத் தத்துவங்களை செந்தமிழில் தந்தருளியவர் ஓம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள்.

Tuesday, June 19, 2012

தமிழ் வளர்த்த தருமையாதீனம் 7

தருமபுரம் ப. சுவாமிநாதன்                                                             http://tawp.in/r/


தருமபுரம் ப. சுவாமிநாதன் (மே 29, 1923 - 15 அக்டோபர் 2009) தமிழிசைத் தேவாரப் பேரறிஞரும், சைவ சித்தாந்த உலகின் இசைஞானி என்றும் போற்றப்படுபவர். திருமுறைகளைப் பொருள் விளங்குமாறு இசைத்தவர். பண்ணிசைக்குப் பல்கலைக்கழகமாகவே திகழ்ந்தவர்.


 வாழ்க்கைக் குறிப்பு

தருமபுரம் ப. சுவாமிநாதன் நாகப்பட்டினம் மாவட்டம், நன்னிலம் வட்டம், வீராக்கண் என்ற ஊரில் மு.பஞ்சநாத முதலியார் - பார்வதி அண்ணி அம்மாள் தம்பதிகளுக்கு மூன்றாவது மகவாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் இராஜகோபால்.


தனது 12 வது அகவையில் தருமபுர ஆதீன மடத்தில் சேர்ந்து அங்கு 24-வது மகா சன்னிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் தொண்டராகப் பணிபுரிந்துகொண்டே, தேவாரத் தமிழிசைப் பள்ளியில் திருமுறை கலாநிதி ஆர். வேலாயுத ஓதுவாரிடம் பயின்றார். ஆறு ஆண்டுகள் பயிற்சிக்குப் பின், முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று, "தேவார இசைமணி" பட்டம் பெற்றார். பின்னர் சிதம்பரம், அண்ணாமலை இசைக் கல்லூரியில், சித்தூர் சுப்பிரமணிய பிள்ளையின் வழிகாட்டலில் 4 ஆண்டுகள் பயின்று முதல் வகுப்பில் தேறி "சங்கீத பூசணம்" பட்டத்தைப் பெற்றார். மதுரை சுப்பிரமணிய முதலியாருடன் இணைந்து மேலும் சில ஆண்டுகள் இசைப் பயிற்சி பெற்றார்[1]. கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் இசைப் பணியில் இவர் ஈடுபட்டார். தேவார இசையை குறிப்பாக பண்ணிசையை உலகெங்கும் பரப்புவதில் இவர் பெரும் பங்கு வகித்தார். 1952 ஆம் ஆண்டில் இருந்து ஆல் இந்தியா வானொலியில் முதற்தர இசைக் கலைஞராக இருந்தவர். யாழ்ப்பாணத்தில், 1960களில் "சைவ பரிபாலன சபை" ஆதரவில் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் தங்கியிருந்து பண்ணிசை மாணவர் பலரை உருவாக்கினார்.


1968-ல் தருமபுர ஆதீன தேவாரப் பள்ளி ஆசிரியப் பணியில் இருந்து விலகி சுவாமிநாதன், தமிழகமெங்கும் தேவாரப் பாடல்களைப் பாடும் திருமுறைப் பணிகளில் ஈடுபட்டார். இவரின் குரலிசை பல குறுந்தட்டுகளாகவும் ஒலிநாடாக்களாகவும் வெளிவந்துள்ளன. பன்னிரு திருமுறையில் உள்ள 18,246 பாடல்களுள் 10,325 பாடல்களுக்கு குரலிசை தந்துள்ளார். இவற்றுள் 11ஆம் திருமுறையின் 393 பாடல்களைத் தருமபுரம் ஆதீனம் நடத்திவரும் www.thevaaram.org மின்னம்பல தளத்தில் சேர்க்கும் உரிமையை வாணி பதிவகத்தார் தந்துள்ளனர்.

Monday, June 18, 2012

மெய்கண்ட சாத்திரங்கள்

மெய்கண்ட சாத்திரங்கள்                                                  http://tawp.in/r/9j3


மெய்கண்ட சாத்திரங்கள் என்பன தமிழ் நாட்டிலே சைவ சமயத்துக்குரிய அடிப்படையான தத்துவமாக எழுந்த சைவ சித்தாந்தத்தை விளக்க, 12ம் நூற்றாண்டு தொடக்கம் 14ம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் தோன்றிய பதின்நான்கு நூல்களையும் குறிக்கும்.



"உந்தி களிறு உயர்போதம் சித்தியார்

பிந்திருபா உண்மைப் பிரகாசம் - வந்த அருட்

பண்பு வினா போற்றிக்கொடி பாசமிலா நெஞ்சுவிடு

உண்மைநெறி சங்கற்ப முற்று"



சைவ சித்தாந்தசாத்திரங்கள் பதினான்கும் அவற்றினை இயற்றியோர்களும்.



திருவுந்தியார் - திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்

திருக்களிற்றுப்படியார் - திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்

சிவஞானபோதம் - மெய்கண்ட தேவநாயனார்

சிவஞான சித்தியார் - திருநறையூர் அருள்நந்தி தேவநாயனார்

இருபா இருபஃது - அருள்நந்திசிவாசாரியார்

உண்மை விளக்கம் - திருவதிகை மனவாசகங்கடந்தார்

சிவப்பிரகாசம் - உமாபதிசிவாசாரியார்

திருவருட்பயன் - உமாபதிசிவாசாரியார்

வினாவெண்பா - உமாபதிசிவாசாரியார்

போற்றிப்பஃறொடை - உமாபதிசிவாசாரியார்

உண்மைநெறி விளக்கம் - உமாபதிசிவாசாரியார்

கொடிப்பாட்டு - உமாபதிசிவாசாரியார்

நெஞ்சுவிடுதூது - உமாபதிசிவாசாரியார்

சங்கற்ப நிராகரணம் - உமாபதிசிவாசாரியார்

என்பன அவையாகும். இந்தப் 14 நூல்களுள்ளும் தலை சிறந்ததாகக் கருதப்படுவது மெய்கண்டார்இயற்றிய சிவஞான போதம்ஆகும். இந்தப் 14 நூல்களும் பல்வேறு ஆசிரியர்களால் இயற்றப்பட்டிருப்பினும், இவற்றுட் தலையாய நூலை எழுதிய மெய்கண்டார் பெயரிலேயே முழுத் தொகுதியையும் மெய்கண்ட சாத்திரம்என்கின்றனர். சிவஞான சித்தியார், இருபா இருபது ஆகிய இரு நூல்களையும் இயற்றியவர் அருள்நந்தி சிவாச்சாரியார். திருவுந்தியார் திருவியலூர் உய்யவந்ததேவ நாயனார்என்பவராலும், திருக்களிற்றுப்படியார் திருக்கடவூர் உய்யவந்ததேவ நாயனார்என்பவராலும் எழுதப்பட்டவை. உண்மை விளக்கம் என்ற நூல் திருவதிகைமனவாசகங் கடந்தார்என்பவரால் எழுதப்பட்டது. சிவப்பிரகாசம் முதல் சங்கற்ப நிராகரணம் ஈறாகவுள்ள எட்டு நூல்களையும் இயற்றியவர் உமாபதி சிவாசாரியார்ஆவார்.

சைவத் திருமுறைகள்


சைவத் திருமுறைகள் என்பவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பாகும். இவை மொத்தம் 12 திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. 12 திருமுறைகளும் அவற்றை இயற்றியோரும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.



திருமுறைத் தொகுப்பு

10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார்.


திருமுறைகள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின் போதும் திருமுறைகள் இன்றளவும் பாடப்பட்டு வருகின்றன. இவை பன்னிரு திருமுறைகள் எனும் அழைக்கப்பட்டன.



பன்னிரு திருமுறைகளின் பட்டியல்       -   நூல் ஆசிரியர்

1 முதலாம் திருமுறை           தேவாரம்     -   திருஞானசம்பந்தர்

2 இரண்டாம் திருமுறை                                 -   திருஞானசம்பந்தர்


3 மூன்றாம் திருமுறை                                    -  திருஞானசம்பந்தர்


4 நான்காம் திருமுறை                                     -  திருநாவுக்கரசர்

5 ஐந்தாம் திருமுறை                                         -  திருநாவுக்கரசர்



6 ஆறாம் திருமுறை                                         -  திருநாவுக்கரசர்


7 ஏழாம் திருமுறை                                           -  சுந்தரர்

எட்டாம் திருமுறை
     திருவாசகம்                                                      -  மாணிக்கவாசகர்

    திருக்கோவையார்                                         - மாணிக்கவாசகர்


 
9 ஒன்பதாம் திருமுறை

திருவிசைப்பா                              - திருமாளிகைத் தேவர்

                                                               சேந்தனார்

                                                               கருவூர்த் தேவர்

                                                               பூந்துருத்தி நம்பிகாடநம்பி

                                                               கண்டராதித்தர்

                                                               வேணாட்டடிகள்       

                                                               திருவாலியமுதனார்

                                                               புருடோத்தம நம்பி

                                                               சேதிராயர்

                                                               திருப்பல்லாண்டு சேந்தனார்

10 பத்தாம் திருமுறை

திருமந்திரம்                                     - திருமூலர்

11 பதினோராம் திருமுறை

திருமுகப் பாசுரம்                         - திரு ஆலவாய் உடையார்

திருவாலங்காட்டுத் திருப்பதிகம்     -காரைக்கால் அம்மையார்

திருவிரட்டை மணிமாலை                -காரைக்கால் அம்மையார்


அற்புதத்திருவந்தாதி                               -காரைக்கால் அம்மையார்


சேத்திர வெண்பா                                 - ஐயடிகள் காடவர்கோன் நாயனார்

பொன்வண்ணத்தந்தாதி                     - சேரமான் பெருமான் நாயனார்

திருவாரூர் மும்மணிக்கோவை   - சேரமான் பெருமான் நாயனார்


திருக்கைலாய ஞானஉலா அல்லது ஆதி உலா - சேரமான் பெருமான் நாயனார்



கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி -  நக்கீர தேவ நாயனார்

திருஈங்கோய்மலை எழுபது                - நக்கீர தேவ நாயனார்


திருவலஞ் சுழி மும்மணிக்கோவை- நக்கீர தேவ நாயனார்


பெருந்தேவபாணி                                       - நக்கீர தேவ நாயனார்


கோபப் பிரசாதம்                                         - நக்கீர தேவ நாயனார்


கார் எட்டு                                                        - நக்கீர தேவ நாயனார்


போற்றித் திருக்கலிவெண்பா               - நக்கீர தேவ நாயனார்


திருமுருகாற்றுப்படை                              - நக்கீர தேவ நாயனார்


திருக்கண்ணப்ப தேவர் திருமறம்      -கல்லாட தேவ நாயனார்

மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை- கபிலதேவ நாயனார்

சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை    - கபிலதேவ நாயனார்


சிவபெருமான் திருஅந்தாதி                                  - கபிலதேவ நாயனார்


சிவபெருமான் திருவந்தாதி                                  -  பரணதேவ நாயனார்

சிவபெருமான் மும்மணிக்கோவை                  - இளம் பெருமான் அடிகள்

மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை- அதிரா அடிகள்

கோயில் நான்மணிமாலை                                   - பட்டினத்துப் பிள்ளையார்

திருக்கழுமல மும்மணிக்கோவை                    - பட்டினத்துப் பிள்ளையார்


திருவிடை மருதூர் மும்மணிக்கோவை       - பட்டினத்துப் பிள்ளையார்


திருவேகம்பமுடையார் திருவந்தாதி               - பட்டினத்துப் பிள்ளையார்


திருவொற்றியூர் ஒருபா ஒருபது                       - பட்டினத்துப் பிள்ளையார்


திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை - நம்பியாண்டார் நம்பி

கோயில் திருப்பண்ணியர் விருத்தம்               - நம்பியாண்டார் நம்பி


திருத் தொண்டர் திருவந்தாதி                             - நம்பியாண்டார் நம்பி


ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி             - நம்பியாண்டார் நம்பி


ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம் - நம்பியாண்டார் நம்பி


ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை  - நம்பியாண்டார் நம்பி


ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை   - நம்பியாண்டார் நம்பி


ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்     - நம்பியாண்டார் நம்பி


ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை          - நம்பியாண்டார் நம்பி


திருநாவுக்கரசர் திருஏகாதசமாலை                   - நம்பியாண்டார் நம்பி



12 பன்னிரண்டாம் திருமுறை

பெரியபுராணம்                                                              - சேக்கிழார் பெருமான்



திருமுறை பாடிய சான்றோர்கள்

வரிசை திருமுறையாசிரியர்         திருமுறை                     பாடல்கள்

1. திருஞான சம்பந்தர்                                1,2,3                             4147

2. திருநாவுக்கரசர்                                          4,5,6                           4066

3. சுந்தரர்                                                             7                                 1026

4. மாணிக்கவாசகர்                                        8                                 1058

5. திருமாளிகை தேவர்                                9                                 44

6. கண்டராதித்தர்                                             9                                10

7. வேணாட்டடிகள்                                         9                                10

8. சேதிராசர்                                                        9                                10

9. பூந்துருத்திநம்பி காடநம்பி                     9                               12

10. புருடோத்தமநம்பி                                     9                               22

11. திருவாலியமுதனார்                               9                                42
       
12. சேந்தனார்                                                     9                                47

13. கருவூர்த்தேவர்                                           9                               105

14. திருமூலர்                                                      10                              3000

15. திருவாலவாயுடையார்                           11                              1

16. கல்லாட தேவ நாயனார்                       11                             1

17. அதிரா அடிகள்                                             11                             23

18. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்    11                             24

19. இளம் பெருமான் அடிகள்                      11                             30

20. பரணதேவ நாயனார்                                 11                            101

21. சேரமான் பெருமான் நாயனார்           11                             11

22. கபிலதேவ நாயனார்                                 11                            157

23. காரைக்கால் அம்மையார்                      11                             143

24. பட்டினத்துப் பிள்ளையார்                       11                            192

25. நக்கீர தேவ நாயனார்                              11                             199

26. நம்பியாண்டார் நம்பி                                11                            382

27. சேக்கிழார்                                                       12                            4286

-------------------------------------------------------------------------------

சைவத் திருமுறைகள்

1, 2, 3: தேவாரம் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

4, 5, 6: தேவாரம் திருநாவுக்கரசு நாயனார்

7: தேவாரம் சுந்தரமூர்த்தி நாயனார்

8: திருவாசகம்,திருக்கோவையார் மாணிக்க வாசகர்

9: திருவிசைப்பா, திருப்பல்லாண்டு திருமாளிகைத்தேவர் உட்பட 9பேர்

10: திருமந்திரம் திருமூலர்

11: பிரபந்த மாலை (நூல்கள் 40) காரைக்கால் அம்மையார் உட்பட 12வர்

12: பெரியபுராணம் சேக்கிழார்

"http://ta.wikipedia.org/w/index.php?title=சைவத்_திருமுறைகள்&oldid=875931" இருந்து மீள்விக்கப்பட்டது

Saturday, June 16, 2012

தமிழ் வளர்த்த தருமையாதீனம் 6

                                                                          01 பதிப்புரை



திருப்பனந்தாள்

சிறீ காசிமடத்து அதிபர், கயிலை மாமுனிவர்

சீர்வளர்சீர் காசிவாசி முத்துக்குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள்.

திருச்சிற்றம்பலம்


"அண்ணல் ஆலவாய், நண்ணி னான்றனை
எண்ணி யேதொழத், திண்ணம் இன்பமே."

- ஞானசம்பந்தர்.


தமிழ் மக்களின் தவப்பயனாகத் தோன்றிய அருளாளர்கள் இருபத்தெழுவர் நமக்கு அளித்துள்ள ஞானக்கருவூலங்கள் பன்னிரு திருமுறைகள். இவை உலக வாழ்க்கையில் மக்கட்கு வேண்டும் நலங் களை அருளுவதோடு முடிவில் இறைவன் திருவடிப் பேற்றையும் நல்குவனவாகும். பன்னிரு திருமுறைகளைப் பக்தியோடு பாராயணம் செய்து நலம் பெறுமாறு நமது தருமை ஆதீன ஆதிபரமாசாரியர் ஷ்ரீகுருஞானசம்பந்தர் நமக்கு அறிவுறுத்துகின்றார். அப்பாடல்,


"ஆசையறாய் பாசம்விடாய் ஆனசிவ பூசைபண்ணாய்

நேசமுடன் ஐந்தெழுத்தை நீநினையாய் - சீ சீ

சினமே தவிராய் திருமுறைகள் ஓதாய்

மனமே உனக்கென்ன வாய்."


என்பதாகும். பன்னிரு திருமுறைகளில் ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் அருளிய முதல் 7 திருமுறைகள் தேவாரம் எனப்படும். தேவாரம் என்பதற்குத் தெய்வத்தைப் போற்றும் இசைப்பாடல்கள் என்பது பொருள் ஆகும்.

ஞானசம்பந்தரும் அப்பரும்:

ஞானசம்பந்தரும் அப்பரும் சமகாலத்தவர்கள். இவ்விருவர் காலமும் கி.பி. 7ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகும். அந்நாளில் தமிழகத்தில் சமண, புத்த சமயங்கள் மேலோங்கிச் சைவம் நிலை குலைந்திருந்தது. தமிழ் நாட்டின் வடபகுதியில் மகேந்திரவர்ம பல்லவனும், தென்பகுதியில் நின்றசீர்நெடுமாற பாண்டியனும் சமண சமயம் சார்ந்து இருந்ததால் மக்களும் வேற்றுச்சமய நெறிகளை விரும்பத் தொடங்கியிருந்தனர். இறைவன் திருவருளால் இவ்விரு பெருமக்களும் தோன்றிச் சைவ சமயத்தைத் தமிழகத்தில் நிலைபெறச் செய்தனர்.


ஞானசம்பந்தர்:

ஞானசம்பந்தர் திருவவதாரத்தால் தமிழ் மொழி தழைத்தது. தமிழ்ச்சமய நெறியே உலகில் உயர்ந்தது என்பதை மக்கள் அறிந்து போற்றத் தொடங்கினர் எனக்கூறுகிறார் சேக்கிழார்.

அடங்கல் முறை:

மூவர் அருளிய தேவாரத் திருப்பதிகங்களைப் பண்முறை, தலமுறை, வரலாற்று முறை என மூவகையாக அடைவு செய்வர். இவை அடங்கல் முறை எனப்படும். அடங்கல் - தொகுப்பு. இவற்றுள் பண்முறையே நம்பியாண்டார் நம்பிகளால் தொகுக்கப்பெற்றது. இதுவே திருமுறை வரிசையில் ஒன்று இரண்டு முதலியனவாக எண்ணி யுரைக்கும் நிலையில் உள்ளது. நம்பிகள் ஞானசம்பந்தர் அருளிய தேவாரத் திருப்பதிகங்களை முதல் மூன்று திருமுறைகளாக அமைத்துத் தந்துள்ளார்.

முதல் திருமுறை:

இத்திருமுறையில் நட்டபாடை (22), தக்கராகம் (24), பழந்தக்கராகம் (16), தக்கேசி (12), குறிஞ்சி (29), வியாழக் குறிஞ்சி (25) மேகராகக் குறிஞ்சி (8) ஆகிய ஏழு பண்களில் 136 திருப் பதிகங்கள் அமைந்துள்ளன. இவற்றின் பாடல் எண்ணிக்கை 1469.

திருப்பதிகம்:

பதிகம் என்பதற்குப் பத்துப் பாடல்களைக் கொண்டது என்பது பொருள். பெரும்பாலானவை பத்துப்பாடல்களைக் கொண்டும் சில கூடியும் குறைந்தும் இருப்பினும் அவை பதிகம் எனவே பெயர் பெறும். ஞானசம்பந்தர் பதிகங்கள் பத்துப் பாடல்களுக்கு மேல், பயன்கூறும் திருக்கடைக்காப்புடன் பதினொரு பாடல்களைக் கொண்டதாய் விளங்குவன.


இத்திருமுறையில் அற்புதப் பதிகங்களாக விளங்குவன ஏழு. அவை ஞானப்பால் உண்டது, பொற்றாளம் பெற்றது, முயலகன் நோய் தீர்த்தது, பனிநோய் போக்கியது, மதுரை அனல் வாதத்தின்போது எரியில் இட்டது, ஆண்பனையைப் பெண்பனை ஆக்கியது, வாசி தீரக் காசு பெற்றது ஆகிய நிகழ்ச்சிகளை உள்ளடக்கியனவாகும்.


திருமுறைப் பதிப்பு:

'சில நூற்றாண்டுகளுக்கு முன், தஞ்சை மாவட்டம் வேதா ரணியத்திலும், திருநெல்வேலியிலும் வாழ்ந்த சிவநேயச் செல்வர்கள் ஆன தேசிகர்கள் பலர், தேவாரப் பதிகங்கள் முழுவதையும் பனை ஓலைச் சுவடிகளில் எழுதி மக்கள் பலருக்கும் கொடுத்து அதனால் பெறும் ஊதியங்கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்தனர். அவர்கள் வரைந்த ஓலைச் சுவடிகளே தமிழகத்திலும், யாழ்ப்பாணத்திலும் கிட்டும் சுவடிகளாகும். இச்சுவடிகளிடையே பாட பேதம் காண்டற்கு வாய்ப்பின்று' என மர்ரே கம்பெனி திரு. எஸ். ராஜம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

பல நூற்றாண்டுகளாக ஓலைச் சுவடிகளிலிருந்த மூவர் தேவாரத் திருமுறைகளை, முதன் முதலில் காகித நூல்வடிவில் உலகுக்கு அளித்த பெருமை திருமயிலை சுப்பராய ஞானியார் அவர்களையே சாரும். திருஞானசம்பந்தர் அருளிய முதல் மூன்று திருமுறைகளை, திருவாவடுதுறை ஆதீனப் பிரதியை ஆதாரமாகக் கொண்டு, காஞ்சிபுரம் வித்துவான் சபாபதி முதலியார் அவர்களைக் கொண்டு ஆய்வு செய்வித்து, அப்பாவுப்பிள்ளை, நமச்சிவாய முதலியார் ஆகியோரின் பொருள் உதவியுடன், குமாரய்யர் அவர்களின் அச்சுக் கூடத்தில், ருத்ரோத்காரி ஆண்டு ஐப்பசித் திங்கள் (கி.பி. 1864)இல் பதிப்பித்து இவர் தமிழுலகிற்கு வழங்கினார்.

சுந்தரர் அருளிய ஏழாம் திருமுறையினை திருவாவடுதுறை ஆதீனப் பிரதியை அடிப்படையாகக் கொண்டு காஞ்சிபுரம் வித்துவான் சபாபதி முதலியார் அவர்களைக் கொண்டு ஆய்வு செய்வித்து, கலாநிதி அச்சுக் கூடத்திலும், சண்முக விலாச அச்சுக் கூடத்திலுமாக குரோதன ஆண்டு (கி.பி. 1865) பதிப்பித்து உதவி னார். திருஞானசம்பந்தர் தேவாரம் அச்சில் வெளிவந்த எட்டுத் திங்களுக்குள் சுந்தரர் தேவாரம் அச்சேறிவிட்டது.

திருநாவுக்கரசர் அருளிச்செய்த நான்கு, ஐந்து, ஆறு ஆகிய மூன்று திருமுறைகளையும் திருவாரூர்ச் செப்பேட்டின்படி பனை ஓலையில் எழுதுவித்துத் தருமை ஆதீனத்தில் இருந்த பிரதியை ஆதார மாகக் கொண்டு, சபாபதி முதலியார் அவர்கள் ஆய்வுடன், ஆதி நாராயணப் பிள்ளை அவர்கள் உதவியால் கலாநிதி அச்சுக்கூடத்தி லும், புட்பரத செட்டியாருடைய கலாரத்னாகர அச்சுக் கூடத்திலுமாக அக்ஷய ஆண்டு புரட்டாசித் திங்கள் (கி.பி. 1866) இல் பதிப்பித்து வெளியிட்டார். சுந்தரர் தேவாரம் வெளிவந்த பதினைந்து திங்களுக்குள் திருநாவுக்கரசர் தேவாரம் பதிப்பிக்கப் பெற்றது.

கி.பி. 1864-66 இல் மூவர் தேவாரமும் ஏழு திருமுறைகளாகப் பண்முறையில் மூன்று தனிநூல்களாக சுப்பராய ஞானியாரால், சபாபதி முதலியார் உதவியுடன் முதன் முதலில் அச்சுப் புத்தக வடிவில் தமிழுலகிற்கு வழங்கப் பெற்றன.

பண்முறை தேவாரப் பதிப்புக்களை சைவ நன்மக்கள் விரும்பி வாங்கியதால் பத்து ஆண்டுகளுக்குள் மறுபதிப்பு வெளிவர வேண்டிய தாயிற்று. அதனை அறிந்த சுப்பராய ஞானியார் பெருமகிழ்வு கொண் டார். கி.பி. 1864-66 இல் பதிப்பிக்கப் பெற்ற தேவார நூல்கள் எத்தனை பிரதிகள் அச்சிடப் பெற்றன என்று குறிப்பிடும் வழக்கம் இன்று வரை வெளிவந்துள்ள தேவாரப் பதிப்புக்களில் குறிப்பிடப்படவில்லை.


சைவ நன்மக்கள், மூவர் தேவாரத்திற்கும் தலமுறைப் பதிப்புக் கிட்டின் ஒருசேரப் பாராயணம் செய்யலாம் என்று எண்ணம் கொண்ட னர். அவ்வெண்ணம் ஈடேறும் வகையில் துறைசை ஆதீனம் மேலகரம் சீலத்திரு. சுப்பிரமணிய தேசிக சுவாமிகள் திருவுளப்பாங்கின் வண்ணம், பனசைக் காசிவாசி சிறீமத் இராமலிங்க சுவாமிகளின் ஆதரவோடு, துறைசை ஆதீன அப்பு ஓதுவார் ஓதின பண்ணின்படி மதுரை, துறைசை ஆதீனங்களில் கிடைத்த பிரதிகளை ஒப்பிட்டு மதுரை இராமசாமிப் பிள்ளை என்னும் ஞானசம்பந்தம் பிள்ளை சென்னை புஷ்பரத செட்டியாரின் கலாரத்தின அச்சுக் கூடத்தில் விஷு ஆண்டு (கி.பி. 1881) மார்கழித் திங்களில் தலமுறைத் தேவாரம் முழுவதையும் முதன்முறையாகப் பதிப்பித்து வழங்கினார்.

தலமுறைத் தேவாரத்தில் மக்கள் நாட்டம் கொள்ளவே தருமை ஆதீனம் 18 ஆவது குருமகா சந்நிதானம் தவத்திரு சிவஞான தேசிக மூர்த்திகள் ஆணையின் வண்ணம், திருப்பனந்தாள் காசிவாசி ஷ்ரீமத் சாமிநாத சுவாமிகள் ஆதரவுடன் திருமயிலை செந்தில்வேல் முதலியாரால் சென்னை விக்டோரியா ஜுபிலி அச்சுக்கூடத்தில் கி.பி. 1894 இலும், சென்னைக் கலாரத்நாகர அச்சுக் கூடத்தின் வாயிலாகக் கி.பி. 1905 இலும் அச்சிடப் பெற்றுத் தலமுறைத் தேவார அடங்கன் முறை வெளிவந்தது.

பண்முறைத் தேவாரம் மக்கட்குக் கிட்டாமையின், திரு வேங்கட நாயுடு அவர்களால் பார்வையிடப்பெற்றுச் சண்முக முதலியார் அவர்களால் சென்னை ஆறுமுக விலாச அச்சுக் கூடத்தில் கி.பி. 1898 இல் பண்முறைத் தேவார அடங்கன் முறை மூன்றாம் முறை யாக வெளியிடப் பெற்றது.


பத்தாண்டுகளுக்குள் மீண்டும் பண்முறைத் தேவார அடங்கன் முறை தேவை ஏற்பட, அது, திருமுறை வரலாறு, மூவர் சரித்திரக் குறிப்புரை முதலியவற்றுடன், திருமயிலை வித்துவான் சண்முகம் பிள்ளை அவர்களால் பார்வையிடப்பெற்று, எஸ். பி. ராஜாராம் அவர்களின் ஸன் ஆப் இந்தியா அச்சியந்திரசாலையில் அச்சிட்டு கி.பி. 1906 ஆம் ஆண்டு ஜுலைத் திங்களில் வெளிவந்தது.


இதனை மீண்டும் நமச்சிவாய முதலியார் கி.பி. 1917 ஆம் ஆண்டு நிரஞ்சன விலாச அச்சியந்திர சாலையில் வெளியிட்டார்.


பங்காளம் அப்புப் பிள்ளை அவர்கள் சென்னை நேஷனல் அச்சுக்கூடத்தின் வாயிலாக கி.பி. 1907 ஆம் ஆண்டு தேவாரப் பதிப்பொன்றை வழங்கினார்.

நாகலிங்க முதலியார், சென்னை ஆதிமூலம் செட்டியார் ஆகியோரால் கி.பி. 1908 இல் கலாரத்னாகர அச்சுக் கூடத்தில் சுந்தரர் தேவாரம் செய்யுள் முதற்குறிப்பு அகராதியுடன் வெளியிடப் பெற்றது. தேவாரத்தைப் பொறுத்தவரையில் இப்பதிப்பிலேயே அகராதியுடன் நூல் வெளியிடும் மரபு தொடங்கியது எனலாம்.


யாழ்ப்பாணத்து வண்ணைநகர்ச் சுவாமிநாத பண்டிதர் அவர்கள், பல்லாண்டுகள் திருமுறை ஏட்டுப் பிரதிகளை ஆய்வு செய்து, பாடபேதங்கள், புதிய பல செய்திகள் என்பவற்றுடன் சென்னை வித்தியாநுபாலன அச்சுக்கூட வாயிலாக வெளியிட்ட, தலமுறை மூவர் தேவார அடங்கன் முறைத் தொகுதி, கி.பி. 1911 ஆம் ஆண்டு மக்களுக்குக் கிட்டுவதாயிற்று.


சைவ நன்மக்கள் பொருள் உணர்வோடு தேவாரத்தைப் பயில வேண்டும் என்ற பெருங்கருணையால் காஞ்சிபுரம் மகா வித்துவான் ஷ்ரீமத் இராமானந்த யோகிகள் பண்முறையில் சுந்தரர் தேவாரத்திற்குப் பதவுரை, பொழிப்புரை, கருத்துரை, விசேடவுரை என்பனவற்றை வழங்கினார். இது கி.பி. 1913 இல் வெளிவந்தது. இவையே தேவாரம் பற்றிய பழைய பதிப்புக்களாம்.


சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் கயப்பாக்கம் சதாசிவச் செட்டியார் அவர்களைக் கொண்டு கி.பி. 1927 பிப்ரவரித் திங்கள் திருஞானசம்பந்தர் தேவாரத்தையும், கி.பி. 1928 பிப்ரவரித் திங்கள் திருநாவுக்கரசர் தேவாரத்தையும், கி.பி. 1929 ஏப்ரலில் சுந்தரர் தேவாரத்தையும் பண்முறையை ஒட்டி தனித்தனி நூல்களாக அச்சிட்டு வழங்கியது.

அடுத்து பண்முறைத்தேவாரப்பதிப்பு சைவசித்தாந்த சமாஜத்தினரால் அரும்பொருள் அகராதியுடன் கி.பி. 1929 - 1931 இல் மூன்று தொகுப்புக்களாக மிகக் குறைந்த விலையில் வெளியிடப் பெற்றன.


திருப்பனந்தாள் சீறீகாசி மடத்தின் சார்பில் தேவாரத் திரு முறைகள் பல பதிப்புக்களாக வெளியிடப் பெற்றுள்ளன.


திருவாவடுதுறை ஆதீனம் பண்முறையில் தேவாரத் திருமுறைகளை வெளியிட்டு உள்ளது.

திருமுறை உரைப் பதிப்பு:

இத்தகைய திருமுறைகள் அனைத்தையும் உரையோடு படித்துப் பொருள் உணர்ந்து ஓதினால் அவை நம் நெஞ்சில் நிலைத்து நின்று பயன் விளைக்கும் என்று திருவுளத்தெண்ணிய தருமை ஆதீனம் 25 ஆவது குருமகாசந்நிதானம் சீர்வளர்சீர் கயிலை சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பன்னிரு திருமுறைகளில் உரை இல்லாதவற்றுக்கும் உரை எழுதச் செய்து ஆதீனப் பதிப்பாக அவற்றை வெளியிடவேண்டும் என்று திருவுளம் பற்றினார்கள்.


தக்க தமிழறிஞர்களைக் கொண்டு உரை எழுதச்செய்து ஆதீன வெளியீடுகளாக அவற்றை 1953 ஆம் ஆண்டு முதல் வெளியிட்டு வந்தார்கள். சீர்வளர்சீர் கயிலைக்குருமணி அவர்கள் அருளாட்சிக் காலத்தில் 9 திருமுறைகள் வரை உரையுடன் வெளியிடப் பெற்றன. சமய உலகம் இவ்வுரைகளைப் போற்றிப் பாராட்டியது.

1971ல் சீர்வளர்சீர் கயிலைக் குருமணி அவர்கள் பரிபூரணம் அடைந்தபின் அவர்கள் தொடங்கிய திருமுறை வெளியீட்டுப் பணியை தருமை ஆதீனம் 26 ஆவது குருமகாசந்நிதானம் அவர்கள் 1974, 1984, 1995ஆம் ஆண்டுகளில் பத்தாம் திருமுறையாகிய திரு மூலர் திருமந்திரத்தை உரையோடு மூன்று தொகுதிகளாக வெளியிட்டு அருளினார்கள்.


1995 ஆம் ஆண்டிலேயே பதினொன்றாம் திருமுறையும் வெளியிடப் பெற்றது. பன்னிரண்டாம் திருமுறை வெளியிடப் பெறுவதற்குரிய வகையில் உரை எழுதுவிக்கப் பெற்று வந்தது.

பல திருமுறைகளும் விற்பனையான நிலையில் அவை ஒருசேர அன்பர்கட்குக் கிடைக்க இயலாததால் அன்பர்கள் அவற்றை ஒருசேர அச்சிட்டு வழங்கியருளுமாறு கேட்டுக்கொண்டனர்.

சீர்வளர்சீர் குருமகாசந்நிதானம் அவர்கள் பெருங்கருணை யோடு பன்னிரு திருமுறைகளையும், பதினாறு தொகுதிகளாக ஒரு சேர ஒளியச்சில் பதிப்பித்து, சீர்வளர்சீர் கயிலைக்குருமணி அவர்கள் திரு வுளத்து எண்ணியவாறு தில்லையில் வெளியிடத் திருவுளம் பற்றி னார்கள்.


1,2,11 ஆகிய திருமுறைகளை ஆதீனச் செலவிலேயே வெளியிடலாம் எனவும், ஏனையவற்றை அன்பர்கள் அளிக்கும் நன்கொடை களைக் கொண்டும் வெளியிடத் திருவுளம் கொண்டார்கள். சீர்வளர்சீர் குருமகாசந்நிதானம் திருவுளத்தெண்ணியபடி பலரும் இத்திருமுறைப் பதிப்புக்களை வெளியிடும் பொறுப்பை ஏற்றனர்.


இத்திருமுறைப் பதிப்புக்களைச் செம்மையான முறையில் அச்சிட்டு வழங்கும் பொறுப்பைச் சென்னை-யாழ்ப்பாணம் காந்தளகம் உரிமையாளர், மறவன்புலவு திரு. க. சச்சிதானந்தன் அவர்கள் ஆர்வத்தோடும் பக்தி உணர்வோடும் ஏற்று நன்முறையில் நிறைவேற்றியுள்ளார்.


பன்னிரு திருமுறைகளில் இம்முதல் திருமுறைக்கு, தருமை ஆதீனப் புலவர் பத்மபூஷண் மகாவித்துவான், முனைவர், திரு ச. தண்டபாணி தேசிகர் அவர்கள் எழுதிய குறிப்புரை, விசேட உரைகளோடு , ஆதீனப் புலவர், வித்துவான், திரு. வி.சா. குருசாமி தேசிகர் அவர்கள் எழுதிய பொழிப்புரையும் சேர்க்கப் பெற்றுள்ளது.


புதுச்சேரி, பிரெஞ்சு இந்தியக் கலை நிறுவனம், ஆய்வறிஞர், பேராசிரியர் திரு. தி. வே. கோபாலய்யர் அவர்கள் இம் முதல் திருமுறையின் உரைத்திறம் பற்றி எழுதியுள்ளார்.


சைவ மெய்யன்பர்கள் சீர்வளர்சீர் குருமகா சந்நிதானத்தின் பெருங்கருணையைப் போற்றி இத்தொகுதியைப் பெற்று, ஓதி உணர்ந்து பயன் எய்துவார்களாக.

தமிழ் வளர்த்த தருமையாதீனம் 5

                                                                          உ




                                                                  குருபாதம்




திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம் 26 ஆவது குருமகா சந்நிதானம்




ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வழங்கியருளிய





                                                                       01 ஆசியுரை



தேவாரம்



                                                                   திருச்சிற்றம்பலம்


நறவம் நிறைவண் டறைதார்க் கொன்றை நயந்து நயனத்தாற்

சுறவஞ் செறிவண் கொடியோ னுடலம் பொடியா விழிசெய்தான்

புறவம் உறைவண் பதியாம் மதியார் புரமூன் றெரிசெய்த

இறைவன் அறவன் இமையோர் ஏத்த உமையோ டிருந்தானே.


                                                                                                                      -திருஞானசம்பந்தர்.

                                                                    திருச்சிற்றம்பலம்





சொரூபநிலை:

இறைவன் ஒருவனே. அவன் தன்மையால் இருதிறப்படு வான். இதனைத் திருஞானசம்பந்தர், `தோடுடைய செவியன்' என்றார். தோட்டையுடைய செவி அம்மைக்குரியது. அம்மையை இடப்பாகத்தே உடையவராதலின் தோடுடைய செவியன் என்று இறைவனை இருதன்மையோடு கூடிய ஓருருவாகவே கூறினார். இறை வன் தோடுடைய செவியனாய்க் காட்சி கொடுத்தபின் பொங்கொளி மால் விடைமீதிவர்ந்து பொற்றோணி புகுந்தருளினார்.

அத் தோணியப்பரை `நறவம் நிறைவண்டு` என்று தொடங் கும் இரண்டாவதாகப் பாடியருளிய பதிகத்துள் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் `இமையோர் ஏத்த உமையோடிருந்தானே` என்றமை யாலும் பெருமானை இருதன்மையுடைய ஒருவனாகவே காட்டி யுள்ளமை உணரத்தக்கது.

மேலும் `ஓருருவாயினை மானாங்காரத்து ஈரியல்பாய்' என்றருளினார். திருப்பரங்குன்றம் `நீடலர் சோதி' எனத் தொடங்கும் பதிகத்துள் மூன்றாம் பாடலில்,


"ஓருடம்புள்ளே உமையொருபாக முடனாகிப்

பாரிடம்பாட இனிதுறைகோயில் பரங்குன்றே".


என்பதனாலும், திருவண்ணாமலைப் பதிகத்தில் ,


 "உண்ணாமுலை உமையாளொடும் உடனாகியவொருவன்"

என்பதனாலும்,

"ஆணும் பெண்ணுமாய் அடியார்க்கு அருள்நல்கி"


என்னும் நாகைக்காரோணப் பாடலாலும் பொருள் ஒன்று, தன்மை இரண்டு என்பதைத் தெளிவித்தார். சூரியனும் அதன் கிரணமும் போல், சிவமும், சக்தியும் பிரிப்பின்றி ஒரே பொருளாய், இருதன்மை உடையதாம். இதனை மணிவாசகர், `நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும் அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்' என்றார்.

அபிராமிப்பட்டர் `உமையும் உமையொரு பாகரும் ஆகி ஏக உருவில் வந்து இங்கு எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்' என்றார்.

இதனை, இறைவனது சொரூபநிலை எனக் கூறுவர் சாத்திர நூலார். சொரூபநிலை என்பது தன்னிலை; அஃதாவது இறைவனது இயற்கை நிலையாம்.

தடத்த நிலை:

இப்பரம்பொருள் தன்னை நோக்க ஒன்றாயும், உலகமுகப் படும் போது, அஃதாவது உயிர்கள் ஈடேற்றம் பெற உலகைத் தொழிற் படுத்தும் போது பலவாயும் பயன்படுகிறது. பரசிவம், பராசக்தி பூரணமாயிருந்தும் செயல்படாமல் ஒன்றாயும் இருதன்மைப்பட்டும் இருக்கிறது.

அப்பரசிவம் தயாமூலதன்மம் என்னும் தத்துவத்தின் வழிநின்று பராசக்தியை நோக்க, அப்பராசக்தி தன் நிலையினின்றும் இறங்கி ஆதிசக்தியாய், தன் சக்தியில் பலகோடியில் ஒரு கூறு சக்தியால் அயன், அரி, அரன் என்னும் முதல் மூவரைப் படைத்து, முறையே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலைச் செய்விக்கின்றது. இதுவே தடத்த நிலையாகும். இதுபற்றியே அபிராமிப்பட்டர் அம்மையை " முதல் மூவருக்கும் அன்னே" என்று அருளினார்.

திருவிளையாடற் புராண ஆசிரியர் பரஞ்சோதி முனிவரும், "மெய், போதம், இன்பம் ஆம் வண்ணம் மெய் (உருவம்) கொண்ட வனாகிய பெருமான் தன் வலியாகிய ஆதிசக்தியின் ஆணைதாங்கி மூவண்ணல் தன் சந்நிதி முத்தொழில் செய்ய வாளாமேவு அண்ணல்" என்றமையாலும் இக்கருத்துப் புலனாகும்.

இதனை ஞானசம்பந்தர் `ஒருவிண் முதல் பூதலம் படைத் தளித்து அழிப்ப மும்மூர்த்திகளாயினை' என்றார்.

சம்புபட்சமும், அணுபட்சமும்:

சம்பு - இறைவன், இன்பத்தின் ஊற்றுக் கண்ணாயிருப்பவர். இங்குக் குறித்த அயன், அரி, அரன் ஆகிய மூவரும் இறைவனுடைய சக்தியே ஆவர். இது சம்புபட்சம். இறைவனே அயன், அரி, அரன் ஆன நிலை.

இம்மூவரும் தவறு செய்தவர் அல்லர். இவர்கள் படைப்பின் பயனால் உயிர்களிற் சில, புண்ணியச் செயற்பாட்டால் உயர்ந்து, இப் பதவியைப் பெற்றுப் படைத்துக் காத்து அழித்தலைச் செய்தன. இவ்வான்மாக்கள் அணுபட்சத்தினர் எனப்படுவர். அஃதாவது உயிர் வர்க்கத்தினர். ஆணவ மலமறைப்பால் வியாபகம் இன்றி அணுத் தன்மை எய்தியிருப்பதால் உயிர் அணு எனப் பெற்றது.

அயனும் அரியும்:

இம்மூவரில் அயனும் அரியுமே நானேபிரமம் என்று தருக்கிய வர்கள். இறைவன் சோதியாய்த் தோன்றியபோது அடிமுடி தேடி இளைத்தவர்கள்.

அதிலும் அரன் அன்று முதல் இன்று வரை தானே பிரமம் என்று தருக்கியவர் அல்லர். அதனாலேயே அரனே சிவம் எனப் போற்றப்படுகிறார். இவ்விரு அரியும் அயனும் கூட ஒருகற்பத்திலே தான் இவ்வாறு தருக்குற்றனர்.

தருக்குற்றார் இறைவனைக் காண இயலாது என்பதைத்தான் திருமுறைகள் திருமாலும் பிரமனும் தேடிக் காணாதவர் என்று பேசு கின்றன.


இறைவனே மூவரும் ஆயினமையைத் திருநாவுக்கரசர்,


`ஒருவனாய் உலகேத்த நின்றநாளோ,

ஓருருவே மூவுருவம் ஆனநாளோ?'

என்ற கேள்வியால் விளக்கிப் போந்தார். இன்னோரன்ன குறிப்புக் களால் இறைவன் ஒருவனே என்பதும், அவன் தானும் தன்சக்தியுமாய் இருதன்மைப்பட்டு இயங்கியும் உலகத்தை இயக்கியும் வருகிறான் என்பதும், அவனே மூவராயும் மூவருக்கும் மேலாக மூவர்கோனாயும் விளங்குகிறான் என்பதும் புலப்படும்.

இவ்வரிய கருத்துக்களை எல்லாம் பன்னிரு திருமுறைகள் பல இடங்களிலும் தெளிவு படுத்துகின்றன.


திருமுறை:

திருமுறை என்ற சொல், திருவை அடையச் செய்யும் நூலுக்குப் பெயராயிற்று. திரு என்பது சிவம். `சிவமே பெறும் திரு எய்திற்றிலேன்' என்பது மணிவாசகர் திருவாக்கு. அவர் சிவத்தைத் திரு என்றே குறிப்பிடுகிறார்.


`திரு' என்ற சொல்லுக்கு உண்மை, அறிவு, ஆனந்தம் என்ற மூன்று பொருளும் உண்டு. சிவபரம்பொருளைச் சச்சிதானந்த வடிவ மாகக் காட்டுகின்றன ஞானநூல்கள். சத் - உள்ளது, சித் - அறிவு, ஆனந்தம் - இன்பம். இம்மூன்றையும் உடையது எதுவோ அதுவே உண்மைத் திரு எனப்படும். சத் என்பது சிவம், சித் என்பது உமாதேவி, ஆனந்தம் என்பது முருகன். எனவே, உண்மை, அறிவு, இன்பம் இம் மூன்றும் நிறைந்ததே முழுமையான பரம்பொருளாகும்.

இப்பரம்பொருளை அடைய வழி கூறும் நூலே திருமுறை எனப்படும். முறை என்ற சொல், நூல் என்ற பொருளில் கந்த புராணத் துள் வந்துள்ளமையைக் காணலாம்.


"இறைநிலம் எழுதுமுன் இளைய பாலகன்

முறைவரை வேன்என முயல்வது ஒக்குமால்"

என்பது கந்தபுராண அவையடக்கப் பாடல் பகுதி.

மேலும் திரு என்ற சொல்லுக்கு, `கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம்' என்று திருக்கோவையாருக்கு உரை கண்ட பேராசிரியர் குறிப்பிடுவதும் கொள்ளத்தக்கதே. என்னை? குழந்தை, யானை என்பனவற்றை எத்துணைப் பெரியவர்களாயினும் எத்துணைச் சிறியவர்களாயினும் காணுந்தோறும், காணுந்தோறும் விருப்பம் கொள்வர். அது போல் சத்து, சித்து, ஆனந்தமாக இருக்கும் பரம் பொருளையும் துன்புறுவோர் இன்புறுவோர் யாவராயினும் நினையுந்தொறும், காணுந்தொறும், பேசுந்தொறும் விருப்புற் றிருப்பரே அன்றி வெறுப்புற்றிருப்பாரல்லர் என்பதும் அறிந்து இன்புறத்தக்கது.

தேவாரம்:

இனி இத் திருமுறைகளுள் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல்களைத் தேவாரம் என்று அழைக்கிறோம்.

தேவ - ஆரம் என்று இதனைப் பிரிக்கலாம். தெய்வத்திற்கு மாலை போல்வது என்பது இதன் பொருள். மலரை இணைத்து மாலையாகச் சூட்டுவது போல, சொற்களை இணைத்துச் சொல்மாலையால் புகழே மணமாக இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை என்றபொருளில் இப்பெயர் அமைந்திருத்தலைக் காணலாம்.

தே - வாரம் எனப் பிரித்தால் தெய்வத்திடம் அன்பை விளை விப்பது எனப்பொருள்படும். வாரம் - அன்பு. "வாரமாய் வணங்கு வார் வல்வினைகள் மாயுமே" என்பது ஞானசம்பந்தர் திருவாக்கு.

மேலும், வாரம் - உரிமை. இறைவனுக்கும் உயிர்கட்கும் உள்ள தொடர்பை - உரிமையை உள்ளவாறு தெளிவித்து உயிர்கள் பயன்பெற உதவும் பாடல்கள் கொண்ட நூல் என்ற பொருளும் இதற்கு உண்டு என்பதைக் காணலாம்.

தேவாரம் என்ற சொல் வழிபாடு என்ற பொருளிலும் வழங்கி உள்ளது. வாரம் என்பது முதல்நடை, வாரம், கூடை, திரள் என்னும் இசை இயக்கம் நான்கினுள் ஒன்று. மந்தநடை முதல்நடை எனவும், விரைந்தநடை திரள் எனவும், இவ்விரண்டிற்கும் இடைநிகர்த்ததாய்ச் சொல்லொழுக்கும், இசையொழுக்கும் பொருந்திய இசைப்பாடல் வாரம் எனவும், சொற்செறிவும், பொருட்செறிவும் உடைய பாடல் கூடை எனவும் அடியார்க்கு நல்லார் உரை, விளக்கம் தருகிறது. எனவே, வழிபாட்டிற்குரிய இனிய இசைப்பாடல் என்பதே தேவாரம் என்பதன் பொருளாக அறியப்பெறுகிறது.


தேவாரம் என்னும் பெயர்வழக்கு, இரட்டைப் புலவர்கள் பாடியுள்ள ஏகாம்பரநாதர் உலாவில்தான் இலக்கியத்தில் முதன் முதலில் காணப்படுகிறது. "மூவாத பேரன்பின் மூவர் முதலிகளும், தேவாரம் செய்த திருப்பாட்டும் ... " என்பது அவ்வுலாத் தொடராகும்.

தெய்வக்குடிச் சோழர்:

திருமுறைகளில் தேவாரம் மட்டும் அடங்கன் முறை என்று வழங்கி வருகிறது. தேவாரம் திருமுறை இரண்டையும் சேர்த்துத் தேவாரத் திருமுறை என்றும் இதனைக் கூறுவர். இவ்வரிய கருவூலத்தை நமக்கெல்லாம் கிடைக்க வழி செய்த பெருமை இறை யருளால் சோழ மன்னர்களுக்கே வாய்த்தது. இதனாலேதான் திரு முறையை வகுத்தளித்த நம்பியாண்டார் நம்பிகள், திருத்தொண்டர்

திருஅந்தாதியில், கோச்செங்கட் சோழ நாயனார் வரலாற்றில், "மை வைத்த கண்டன் நெறியன்றி மற்றோர் நெறி கருதாத், தெய்வக் குடிச் சோழன்" என்று கூறி அருளினார்.

திருமுறைகண்ட சோழன் யார்?:

சோழர்கள்தான் திருமுறைகளை முதன்முதல் கண்டும் கேட்டும், அவற்றைத் திருக் கோயில்களில் ஓதுவதற்கு நிவந்தம் அளித் தும் போற்றினர் என்பது பல கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது.

முதலாம் ஆதித்த சோழன் ஆட்சிக் காலம் கி.பி. 873இல் திரு எறும்பியூரிலும், கி.பி. 876இல் பழுவூரிலும் கோயில்களில் திருப் பதிகம் ஓத நிவந்தம் அளித்தமை அவ்வத்தலக் கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது.


முதல் பராந்தக சோழன் ஆட்சிக்காலம் கி.பி. 910இல் திருவாவடுதுறையிலும், கி.பி. 911இல் அல்லூரிலும், கி.பி. 914இல் திருத்தவத்துறையிலும் (லால்குடி), திருமுறைகளை ஓத நிவந்தம் அளித்தமை அவ்வூர்க் கோயில் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.


உத்தம சோழன் ஆட்சியில் கி.பி. 977இல் திருநல்லத்திலும், (கோனேரி இராஜபுரம்) கி.பி. 984இல் அந்துவநல்லூரிலும் திருப் பதிகங்கள் ஓதுவதற்கு நிவந்தங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

பல்லவர் ஆட்சியில் நந்திவர்ம பல்லவனின் 17ஆம் ஆட்சி ஆண்டாகிய கி.பி. 750இல் திருவல்லம் கோயில் கல்வெட்டில் "திருப்பள்ளித் தாமம் பறிப்பார்க்கும், திருப்பதிகங்கள் ஓதுவார் உள்ளிட்ட பல பணிகள் செய்வார்க்கும் நெல்லுநானூற்றுக்காடியும்" என்று குறிக்கப்படுகிறது. இதைப் பார்க்கும்போது ஆதித்த சோழனுக்கு முன்பே பல்லவர் ஆட்சியிலேயே திருமுறைகளைக் கோயில்களில் ஓதுவதற்கு நிவந்தங்கள் அளித்த உண்மை புலனாகிறது.


இவையெல்லாம் முதலாம் இராஜராஜன் காலத்திற்கு (கி.பி. 985-1014) முன்பே நிகழ்ந்தவை. எனவே திருமுறை கண்ட சோழன் முதலாம் ஆதித்தனா, முதலாம் இராஜராஜனா என்பதில் கருத்து வேறு பாடுகள் தோன்றியுள்ளன.

கல்வெட்டு ஆய்வாளர் திரு. சதாசிவ பண்டாரத்தார் முதலாம் ஆதித்த சோழன் காலமே நம்பியாண்டார் நம்பிகளின் காலம் என்பர். திருமுறை கண்டதும் அக்காலமே என்பர். திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர் திரு.க. வெள்ளைவாரணனாரும் அக்கருத்தையே வலியுறுத்துகின்றார்.



கல்வெட்டு ஆய்வாளர், குடந்தை திரு.ந.சேதுராமன் முதலி யோர் முதலாம் இராஜராஜனே என்பர். உமாபதிசிவம் இயற்றியருளிய திருமுறைகண்ட புராணம் இராஜராஜனையே திருமுறைகண்ட சோழன் என்று குறிப்பிடுகின்றது.


சோழர் மூவரின் திருமுறைப்பணி:

நம்பியாண்டார் நம்பிகள், முதலாம் இராஜராஜன் காலத் திலும், முதலாம் இராஜேந்திரன் காலத்திலும் இருந்தவராகக் கருதப் படுவதால், இராஜராஜன் காலத்தில் முதல் ஏழு திருமுறைகளையும், இராஜேந்திரன் காலத்தில் எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்றாந்


திருமுறைகளையும் தொகுத்தவர் ஆவர். இதனால் இந் நம்பிகள் வேதத்தை நான்காக வகுத்த வேதவியாசருக்கு ஒப்பாகப் போற்றப்படுகிறார். அநபாயன் என்னும் சிறப்புப்பெயர் பெற்ற இரண்டாம் குலோத்துங்கன் சேக்கிழாரைக் கொண்டு பெரியபுராணம் பாடச் செய்தவன்.



"திருத்தொண்டர் புராணம்எழு தியமுறையை மறையோர்

சிவமூல மந்திரத்தால் அருச்சனைசெய் திறைஞ்சி

இருக்குமுதல் மறைநான்கில் இன்றுமுத லாக

இதுவும்ஒரு தமிழ்வேதம் ஐந்தாவ தென்று

கருத்திருத்தி அமுதடைக்காய் நறுந்தூப தீபம்

கவரிகுடை கண்ணாடி ஆலத்தி நீறு

பரித்தளவு செயக்கண்டு வளவர்பிரான் முறையைப்

பசும்பட்டி னாற்சூழ்ந்து பொற்கலத்தில் இருத்தி."


என்ற உமாபதி சிவம் அருளிய சேக்கிழார் புராணப் பாடலால், திருத் தொண்டர் புராணத்தைச் சிவமாகப் பாவித்து, சிவமூல மந்திரத்தால் மறையோர் அர்ச்சித்து, `தோடு' செய்த திருநெறிய செந்தமிழோடு ஒக்கும் என்றுரை செய்து, செப்பேடு செய்வித்துப் பன்னிரண்டாந் திருமுறையாக ஏற்றுப் போற்றினர்.


எனவே, முதலாம் இராஜராஜன், இராஜேந்திரன், இரண்டாம் குலோத்துங்கன் ஆகிய மூவேந்தர் காலத்திலேயே இப்பன்னிரு திருமுறைகள் தொகுக்கப் பெற்றன என்பதைத் தெளிந்து பணிந்து போற்றுவோமாக.


செப்பேடு:

கி.பி. 1070 முதல் கி.பி. 1120 வரை ஆட்சி புரிந்தவன் முதல் குலோத்துங்கன். இவன் படைத்தலைவர்களுள் ஒருவனான மணவிற் கூத்தன் காளிங்கராயன் என்பான், மூவர் தேவாரத் திருப்பதிகங்களைச் செப்பேடுகளில் எழுதுவித்து, திருக்கோயிலுள் சேமமுற வைத்தான் என்று தில்லைக் கோயில் கல்வெட்டுக் கூறுகிறது. அதுபற்றிய வெண்பா:



"முத்திறத்தா ரீசன் முதற்றிறத்தைப் பாடியவா(று)

ஒத்தமைத்த செப்பேட்டி னுள்எழுதி - இத்தலத்தின்

எல்லைக் கிரிவாய் இசைஎழுதி னான்கூத்தன்

தில்லைச்சிற் றம்பலமே சென்று."


தில்லைச்சிற்றம்பலத்தின் மேல்பால் மூவர் கைஅடையாளம் உள்ள அறையில் இருந்த திருமுறைகள் செல்அரித்திருந்தமையை உணர்ந்தமையால் செல் அரியாவண்ணம் இப்படைத்தலைவன் காளிங்கராயன் செப்பேடு செய்வித்தான்.

திருவாரூரிலும் திருமுறைகள் செப்பேடு செய்திருந் தமையை, அச்செப்பேட்டிலிருந்து படி எடுத்த தருமை ஆதீன ஓலைச் சுவடியால் புலனாகிறது. இப்படி யெல்லாம் திருமுறைகளின் அருமை, பெருமை தெரிந்து போற்றிய முன்னோர்களின் திருவுளக் கருத்தை உணர்வோமாக.


ஓலைச்சுவடிகளில் திருமுறை:

மற்றொரு வகையில் திருமுறைகண்ட சோழன் பற்றிச் சிந்திப் போம். ஞானசம்பந்தர் காலத்தில் அவருடனே இருந்து அவர் பாடல்களையெல்லாம் எழுதி வந்த சம்பந்த சரணாலயரே திருமுறை களை முதன்முதலில் ஓலைச்சுவடிகளில் எழுதியவர். அதன்பிறகு ஏறத்தாழ ஞானசம்பந்தர் காலத்தில் இருந்தவ ராகக் கருதப்பெறும் சீகாழி கணநாதநாயனார், திருமுறைகளை எழுதுவோர் வாசிப்போரைத் தயாரித்தார் என்பது அவரைப் பற்றிய செய்தி.



பிற்காலத்தில் திருநெல்வேலிப் பகுதியிலும், வேதாரண்யம் பகுதியிலும் சில தேசிகர் குடும்பத்தினர் ஓலையில் திருமுறைகளை எழுதி, பலருக்கும் வழங்கி அதனால் வரும் ஊதியம் கொண்டு வாழ்க்கை நடத்தினர் என்று மர்ரே கம்பெனி திரு. ராஜம் குறிப்பிட்டு உள்ளதும் சிந்திக்கவேண்டிய செய்தி. இதில் காலக் குறிப்பில்லை.


இதுபற்றிப் பொதுவாகச் சிந்தித்தால் தேவாரத் திருமுறைகள் தேவார மூவர் காலத்திற்குபின் மக்கள் வழக்கில் அருகி இருந்தன என்பதும், திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையார் அருளால் நம்பி யாண்டார் நம்பிகள் இராஜராஜன் வேண்டுகோட்படி சிதம்பரத்தில் சிற்றம்பலத்தின்மேல்பால் உள்ள மூவர் கைஅடையாளம் உள்ள அறையில் திருமுறைகள் உள்ளன என்பது கண்டு அறிவித்ததுமுதல், இன்றுள்ள மூவர் தேவாரம் நமக்குக் கிடைத்துள்ளது என்று கொள்ள இடம் தருகிறது.


திரு. வெள்ளை வாரணனார் திருமுறைகண்டபுராணம் இயற்றியவர் உமாபதிசிவம் என்பதை ஒத்துக்கொள்கிறார். உமாபதி சிவம் கி.பி. 13ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் கி.பி. 14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவர்.


இராஜராஜசோழன் காலத்திற்குப்பிறகு 300 ஆண்டளவில் வாழ்ந்தவர். இவர் இதுபற்றிச் சிந்திக்காமல் இருந்திருப்பாரா என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது. மேலும் அபயகுலசேகரன் என்ற பெயர், சோழர்கள் யாருக்கும் பெயராக இருந்ததில்லை என ஆய்வு செய்துள்ளார். பட்டப்பெயராக நம்பியாண்டார் நம்பிகளே கொடுத்திருக்கலாம் என்று கொள்வதால் தவறேதும் இல்லை எனத் தோன்றுகிறது.


இடங்கழி நாயனாரையும், கோச்செங்கட் சோழ நாயனாரை யும் சிற்றம்பலம் பொன்வேய்ந்தவர்கள் என்று நம்பிகள் சொல்கிறார். இதுபோன்ற குறிப்பு இராஜராஜனைப்பற்றி நம்பிகள் ஏதும் குறிப்பிட வில்லையே என்கிறார். இது சிந்தைனைக்குரியதே.


முதலில் தேவாரம் பாடியவர்:


ஞானசம்பந்தர் அருளிய பதிகங்களைத் திருக்கடைக்காப்பு என்றும், நாவுக்கரசர் அருளிய பதிகங்களைத் தேவாரம் என்றும், சுந்தரர் அருளிய பதிகங்களைத் திருப்பாட்டு என்றும் பழமையில் வழங்கிய மரபையும் நாம் தெரிந்துகொள்ளுதல் நலம் பயக்கும்.


ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் சமகாலத்தில் வாழ்ந்த வர்கள் என்று போற்றப் பெறுபவர்கள். ஆனால் இவர்களில் முதன் முதல் தேவாரம் பாடியவர் யார் என்பதையும் தெரிந்து கொள்ளுதல் வரலாற்று அடிப்படையில் நலம் தரும் செயலாம்.


சுருங்கச் சொன்னால் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் ஆட்சிக்காலம் கி.பி. 615-630. இந்தக் காலத்தில்தான் அப்பர் பெருமான் சமண சமயத்திலிருந்து சைவம் சார்ந்தார். முதன்முதலில், " கூற்றாயினவாறு" என்று தொடங்கும் தேவாரம் பாடியருளினார். மகேந்திரவர்ம பல்லவன் விளைத்த இடர்களையெல்லாம் இறை யருளால் வென்றார். மகேந்திரவர்மனும் மனம்திருந்தி சைவசமயம் சார்ந்து திருவதிகையில் குணபரவீச்சுரம் என்னும் சிவன் கோயிலைக் கட்டினான். திருச்சிராப்பள்ளியிலும் மலைமீது குடைவரைக் கோயில் அமைத்தான். அவ்வரசன் சமணசமயத்தைச் சார்ந்திருந்ததும், நாவுக் கரசரால் மனம்திருந்தி சைவன் ஆனதும் அக்குடைவரைக் கோயிலில் உள்ள கல்வெட்டுக்களால் அறியப்படும் செய்தி. மகேந்திரவர்ம பல்லவனின் மகன் முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் ஆட்சிக்காலம் கி.பி. 630-668. ஞானசம்பந்தர் அவதாரமே கி.பி. 638 என்று நரசிம்மவர்மன் காலமாகக் கணக்கிடுகின்றனர்.
கி.பி. 642இல் நரசிம்மவர்ம பல்லவன் பரஞ்சோதியாரைப் படைத் தலைவராகக் கொண்டு, வாதாபியை வென்று, அவர் சிவன் அடியார் என்பதறிந்து, அவருக்குச் சிறப்புக்கள் செய்து, நிரம்பப் பொருளும் கொடுத்து, சிவதொண்டு செய்துவர விடுத்தான். இப் பரஞ்சோதியாரே சிறுத்தொண்டர் எனப் போற்றப்படுவர். கி.பி. 642 இல் திருச்செங்காட்டங்குடி சேர்ந்து திருவெண்காட்டு நங்கையை மணந்து சீராளதேவரைப்பெற்று மூவாண்டில் பள்ளியில் சேர்த்தார். அப்பொழுது ஞானசம்பந்தர் கி.பி. 645இல் திருச்செங்காட்டங்குடிக்கு எழுந்தருளி இறைவனைத் தரிசித்து, சிறுத்தொண்டரையும், சீராள தேவரையும் "பைங்கோட்டு மலர்ப்புன்னை" திருப்பதிகத்துள் குறிப் பிட்டுள்ளார்.

இவ்வரலாற்றினால் மகேந்திரவர்ம பல்லவன் காலத்திலேயே வாழ்ந்து அற்புதங்கள் நிகழ்த்திய அப்பரே முதலில் தேவாரம் பாடியவர் என்பது தெளிவாகும்.


முதல் ஆசாரியர்:

முதலில் தேவாரம் பாடியவர் என்ற சிறப்பு அப்பருக்கு இருந்தபோதிலும், ஆசாரியத்துவம் யாருக்கு முதன்மையாக வழங்கி யுள்ளார் இறைவன் என்பதையும் தெரிந்துகொள்வது தெளிவுதரும் செயலாகும்.


சீகாழியில் பெருமான் ஞானசம்பந்தருக்குத் தோடுடைய செவியனாய் விடையேறிக் காட்சிகொடுத்தான். அக்காட்சியைத் தன்னை ஈன்றெடுத்த தவமுடைய தாதைக்கு அடையாளங்களுடன் சுட்டிக் காட்டினார் ஞானசம்பந்தர். ஆனால் அக்காட்சி சிவபாத இருதயருக்குப் புலப்படவில்லை.


அடுத்து, திருமறைக்காட்டில் கதவு திறக்கவும் அடைக்கவும் பாடிய நிகழ்ச்சியால், நெகிழ்வுற்ற அப்பரைத் திருவாய்மூர்

வரச் சொன்னார் இறைவன். அதை ஞானசம்பந்தரும் உணர்ந்து அப்பருடன் பின் தொடர்ந்தார். திருவாய்மூர்ச் செல்வனாரும் ஞானசம்பந்தருக்குத்தான் காட்சி நல்கினார். ஞானசம்பந்தர் காட்டக் கண்டார் அப்பரடிகள். அதன் பிறகுதான் அப்பர், `பாட அடியார் பரவக்கண்டேன்' என்று பாடுகிறார்.

முத்தமிழ் விரகராம் ஞானசம்பந்தர் மூல இலக்கியங்களாகப் பலவற்றை இயற்றியதோடு அவையெல்லாம் இசை நுணுக்கம் வாய்ந்த பாடல்களாகப் பாடியுள்ள சிறப்பு, அவதாரத்திற்கு 16 காரணங்கள் குறிப்பிடும் சேக்கிழார் வாக்கு, குடை, திருச்சின்னம், சிவிகை, முத்துவிதானம் போன்ற ஆசாரியருக்குரிய அங்கங்கள் எல்லாம் ஞானசம்பந்தருக்கே கொடுத்துள்ளமை முதலியவற்றால் முதன்மை ஆசாரியத்துவம் ஞானசம்பந்தருக்கே வழங்கியுள்ளமை புலனாகிறது. மேலும் இவர் முத்திப்பேறெய்திய ஆச்சாள்புரம் ஆச்சாரியபுரம் என்று வழங்கியமையாலும் இக்கருத்தை நன்கு தெளியலாம்.

பண் அடைவு:

பண்முறைப் பதிப்பு, தலமுறைப் பதிப்பு என்னும் இருவகைப் பதிப்புக்களே நடைமுறையில் வெளிவந்துள்ளன. அடுத்து வரலாற்று முறைப் பதிப்பும் விரைவில் வெளிவர வேண்டியது அவசியமாகும்.


முதல் திருமுறையில் நட்டப்பாடைப் பண்ணில் 22 பதிகங் களும், தக்கராகப் பண்ணில் 24 பதிகங்களும், பழந்தக்கராகப் பண் ணில் 8 பதிகங்களும், தக்கேசிப் பண்ணில் 12 பதிகங்களும், குறிஞ்சிப் பண்ணில் 24 பதிகங்களும், வியாழக் குறிஞ்சிப் பண்ணில் 25 பதிகங்களும், மேகராகக் குறிஞ்சிப் பண்ணில் 8 பதிகங்களும் ஆக 136 பதிகங்களும், 88 தலங்களும் உள்ளன. இவற்றுள் "மாதர் மடப்பிடி யும்" என்ற பதிகம் யாழ்முரி என்றிருந்த போதிலும், அதுவும் மேக ராகக் குறிஞ்சிப் பண்ணேயாகும். யாழை முரிக்கத் துணை நின்றதால் யாழ்முரி என்று பெயர் பெற்றதே அன்றி அது தனிப் பண்ணல்ல என்பதும் அறிக.

அந்தாளிக் குறிஞ்சிப் பண்ணில் ஆச்சாள் புரத்திலே, திருமண நிறைவின் போது, பாடிய, "கல்லூர்ப் பெருமணம்" என்று தொடங்கும் பதிகமும், திருக்குருகாவூர் வெள்ளடையில் பாடியருளிய "சுண்ண வெண் ணீறணி" என்று தொடங்கும் பதிகமும் ஆக இரண்டு பதிகங் களே உள்ளன. பண் முறைப்படி பார்த்தால், குறிஞ்சி, வியாழக் குறிஞ்சி, மேகராகக் குறிஞ்சிக்கு அடுத்ததாக அந்தாளிக் குறிஞ்சிப் பண் இடம் பெற்றிருக்க வேண்டும். ஞானசம்பந்தர் வாழ்வின் நிறைவில் பாடியதால் அப்பண்ணை மட்டும் மூன்றாம் திருமுறையின் நிறைவில் சேர்த்துள்ளனர். பண்முறைப் பதிப்பு என்ற முறையில் அப்பண் முதல் திருமுறையில் இருப்பதே பொருத்தமானதாகும். விவரம் தெரிவதற்கு இங்கு இது குறிக்கப்பட்டுள்ளது.

"துஞ்ச வருவாரும்" எனத் தொடங்கும் திருவாலங்காட்டுத் திருப்பதிகம், பழம்பஞ்சுரத்தில் சேர்க்கப்பட வேண்டும். இப்பதிகத்தை மூன்றாந் திருமுறையில் பழம்பஞ்சுரப் பதிகங்களோடு சேர்த்து, அத்திருமுறையில் உள்ள அந்தாளிக் குறிஞ்சிப் பண்ணமைப்புடைய இரு பதிகங்களையும் முதல் திருமுறையில் மேகராகக் குறிஞ்சிப் பண்ணிற்கு அடுத்ததாகச் சேர்ப்பதே முறையாகும். இவ்வாறு ஒன்றைக் கழித்து இரண்டு பதிகங்களை முதல் திருமுறையில் சேர்த்தால் முதல் திருமுறைப் பதிகங்கள் 137 ஆகும்.

திருஞானசம்பந்தர் அருளிய முதல் திருமுறையில் `குருவருள்' என்ற தலைப்பில் சில பாடல்களுக்கு விளக்கம் குறிக்கப்பெற்றது. நிற்க, மேலும் சில திருப்பதிகப் பாடல்களின் அரிய கருத்துக்களை இனிக்காண்போம்.

மூத்த திருப்பதிகம்:


இத்திருமுறையில் எட்டுப் பண்களில் அமைந்த 136 திருப் பதிகங்கள் உள்ளன. அவற்றுள் முதல் திருப்பதிகம் தோடுடைய செவியன் என்பது. ஞானசம்பந்தர் காலத்திற்கு முன்பே பண்ணோடு திருப்பதிகம் பாடி நெறிகாட்டியவர் காரைக்காலம்மையார்.


அவர் பாடிய நட்டபாடைப் பண்ணையே முதலில் ஞான சம்பந்தரும் அருளினார். இது பற்றியே அம்மையார் அருளிய திருப் பதிகம் மூத்த திருப் பதிகம் என்ற பெயரைப் பெறுவதாயிற்று.

திருப்பதிகம்:

பதிகம் என்பதற்குப் பத்துப் பாடல்களைக் கொண்டது என்பது பொருள். பெரும்பாலான பதிகங்கள் பத்துப் பாடல்களைக் கொண்டும், சில குறைந்தும் சில கூடியும் அமைந்துள்ளன.

திருஞான சம்பந்தர் திருப்பதிகம் பத்துப் பாடல்களோடு பதினொன்றாம் பாடலையும் கொண்டுள்ளது. அதில் பாடியவர் பெயரும் பதிகப்பயனும் கூறப்படுகிறது. பதினொன்றாவது பாடல் திருக்கடைக்காப்பு எனப் பெறும். பலசுருதி எனச் சொல்லப்பெறும் பதிகப் பயன் கூறும் பாடலாக, இத் திருக்கடைக்காப்பு விளங்குகின்றது. இதுபற்றியே அவர் அருளிய தேவாரத்திற்குத் திருக்கடைக்காப்பு எனப் பெயர் வழங்கலாயிற்று.


ஞானசம்பந்தர் பதினாறாயிரம் பதிகங்கள் அருளிச் செய்தார் என நம்பியாண்டார் நம்பிகள் கூறுகின்றார். நாவுக்கரசர் நாற்பத் தொன்பதாயிரம் பதிகங்கள் அருளினார் எனச் சுந்தரரும், நம்பி யாண்டார் நம்பிகளும் கூறுகின்றனர். சுந்தரர் முப்பத்தெட்டாயிரம் பதிகங்கள் பாடினார் எனத் திருமுறைகண்ட புராணம் கூறுகிறது.

இத்துணைப் பதிகங்களில் பலவும் கிடைக்கப் பெறாமையால் இவர்கள் பதிகம் எனக் கூறுவது பாடல்களையே குறிப்பதாகலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். இன்று திருஞானசம்பந்தர் அருளி யனவாக 384 பதிகங்களும், திருநாவுக்கரசர் அருளியனவாக 307 பதிகங்களும், சுந்தரர் அருளியனவாக 100 பதிகங்களுமே கிடைத் துள்ளன.

எட்டாம் பாடல்:

இவர் திருப்பதிகங்களில் எட்டாவது பாடல், இராவணன் செய்த பிழையைப் பெருமான் மன்னித்து அவனுக்கு அருள் புரிந்ததைத் தெரிவிக்கின்றது. இதனைச் சேக்கிழார்,



"மண்ணுலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின்
கண்ணுதலான் பெருங்கருணை கைக்கொள்ளும் எனக்காட்ட
எண்ணமிலா வல்லரக்கன் எடுத்துமுறிந் திசைபாட
அண்ணலவற் கருள்புரிந்த ஆக்கப்பா டருள்செய்தார்"


எனக் கூறுவார்.


ஒன்பதாம் பாடல்:


ஒன்பதாவது திருப்பாடல் திருமால் பிரமன் அடிமுடி தேடியறிய இயலாது எய்த்தமையை இயம்புவது. அதற்குச் சேக்கிழார் தரும் விளக்கத்தைப் பின் வரும் பாடலால் அறியலாம்.


"தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத்தொழார்
வழுவான மனத்தாலே மாலாய மாலயனும்
இழிவாகும் கருவிலங்கும் பறவையுமாய் எய்தாமை
விழுவார்கள் அஞ்செழுத்துந் துதித்துய்ந்த படிவிரித்தார்".


பத்தாம் பாடல்:

பத்தாவது திருப்பாடல், சமணம், புத்தம் ஆகிய புறச் சமய நெறிகளைக் கடிந்துரைப்பது. இதனைக் குறித்துச் சேக்கிழார் அருளும் விளக்கத்தைப் பின்வரும் பாடலால் அறியலாம்.


"வேதகா ரணராய வெண்பிறைசேர் செய்யசடை
நாதன்நெறி அறிந்துய்யார் தம்மிலே நலங்கொள்ளும்
போதம்இலாச் சமண்கையர் புத்தர்வழி பழியாக்கும்
ஏதமே எனமொழிந்தார் எங்கள்பிரான் சம்பந்தர்"

.
பதிகரணம்:

திருப்புறவம் எனும் தலத்தில் `எய்யாவென்றி' என்று தொடங் கும் பதிகத்தின் இறுதிப் பாடலாகிய "பொன்னியல்மாடப் புரிைச" என்னும் பாடலில் மூன்றாம் வரியில் "தன்னியல்பில்லாச் சண்பையர் கோன்" என்றதனால் ஞானசம்பந்தர் அவனருளே கண்ணாகக் கொண்டு சீவபோதமற்ற நிலையில் பசுகரணம் அற்றுப் பதிகரணத்தோடு பாடியவர் என்பதை அகச்சான்றால் உணரலாம்.


சென்றடையாத திரு :

திருச்சிராப்பள்ளித் தேவாரம் "நன்றுடையானைத் தீய திலானை" என்பது. இறைவன் ஒருவனே தீதில்லாத நன்றே உடையவன் என்பதை இது விளக்குகின்றது. உடன்பாட்டு வினையால் நன்றுடையான் என்றவர், எதிர்மறைவினையால் தீயது இல்லான் என்றும் கூறி, இறைவனின் இயல்பை, உடன்பாட்டினாலும், எதிர்மறையாலும் வலியுறுத்தியுள்ளார்.

இப்பாடலில் "சென்றடையாத திருவுடையான்" என்கிறார். இதற்கு ஒருபொருள் அவனே அருளினாலன்றி நாமே சென்று அடைய முடியாத திருவை உடையான் என்பது. இக்கருத்தைத்

"தாமே தருமவரைத் தன்வலியி னால்கருதல்
ஆமே? இவன் ஆர் அதற்கு"

என்ற திருவருட்பயன் பாடலால் அறியலாம். நம்பியாண்டார் நம்பிகள் அருளிய திருநாரையூர் விநாயகர் இரட்டைமணி மாலையில் அமைந்த,

"என்னைநினைந்து அடிமை கொண்டு என்இடர்கெடுத்துத், தன்னைநினையத் தருகின்றான்"


என்ற பாடலும் இக்கருத்தையே வலியுறுத்துகிறது.

"அவன் அருளாலே அவன்தாள் வணங்கி" என்ற ஆளுடைய அடிகள் வாக்கும் இக்கருத்துப் பற்றியதே.


இந்தக் கருத்தை வலியுறுத்துவார்போல் அப்பரும் எறும்பியூர்த் திருத்தாண்டகத்துள் `பன்னியசெந்தமிழறியேன்' என்ற பாடலில்,

"அன்னையையும் அத்தனையும் போல அன்பாய்
அடைந்தேனைத் தொடர்ந்தென்னை யாளாக் கொண்ட
தென்எறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே"


என்றருளியுள்ளமை கண்டு மகிழத்தக்கது.

இதற்கு இரண்டாவது பொருள், இனிச் சென்று சேரவேண்டிய திருவேண்டப்படாதவன் இறைவன் என்பது. குறைவிலா நிறைவினன் என்பதாலும், நிறை செல்வத்தியாகேசர் என்பதாலும் இதனைநன்கு உணரலாம்.

முதலில் கண்ட பொருளையும், இரண்டாவது கண்ட பொருளை யும் வலியுறுத்துமாப்போலே திருச்சிவபுரம் திருத்தாண்டகத்துள் `வானவன்காண்'

என்ற பாடலில் `தேனவன்காண் சென்றடையாச் செல்வன்தான்காண்' என அப்பரும் அருள்வதைக் காண்க.

மூவினைகள்:

திருவாரூரில் பாடிய `பாடலன் நான்மறையன்' என்ற பதிகத் துள் இரண்டாம் பாடலில், "காலையும் மாலையும் போய்ப் பணிதல் கருமமே" என்று கடமையை உணர்த்துகின்றார்.

வழிபாட்டாலும், தேவாரத் திருப்பதிகங்களை ஓதுவதாலும் பழவினை (சஞ்சிதம்), வரு வினை - மேல் எதிர்காலத்து வருவினை, (ஆகாமியம்), இப்பிறப்பில் நாம் அநுபவிக்க இருக்கும் வினை, (பிராரத்தவினை) ஆகிய இவையெல்லாம் தீரும் என்பது ஆளுடைய பிள்ளையாரின் அறிவுரை.

"வல்லதோர் இச்சையினால் வழிபாடிவை பத்தும் வாய்க்கச் சொல்லுதல் கேட்டல் வல்லார் துன்பம் துடைப்பாரே". இதுபொதுவாக வினையினால் வரும் துன்பம் நீங்கும் என்கிறது.

`தோடுடைய செவியன்' கடைசிப் பாடலில், தொல்வினை - பழவினை தீர்தல் எளிதாம் என்றறிவித்துள்ளமை காண்க. திரு நள்ளாற்றுப் போகமார்த்த பூண்முலையாள் என்னும் பதிகக் கடைசிப் பாடலில் "உண்பு நீங்கி வானவரோடு உலகில் உறைவாரே" உண்பு - பிராரத்தவினை. இதில் பிராரத்த வினை நீங்கும் என்கிறார்.


"கண்ணார் கோயில் கைதொழு வார்கட் கிடர்பாவம்
நண்ணா வாகும் நல்வினை யாய நணுகும்மே"

என்பதனால் ஆகாமியமாகிய எதிர்வினை நணுகாது என்கிறார் ஞானசம்பந்தர். இவ்வாறு பலபாடல்களால் சஞ்சித, ஆகாமிய, பிராரத்த வினைகள் நீங்கும் என்பதை இம்முதல் திருமுறையிலேயும் குறிப்பிட்டுள்ளமையை, ஓதி உணர்ந்து கொள்க. மூவினையும் முற்றிலும் நீங்காது. நீங்கினால் பிறவி இல்லையாகி விடும். எனவே இலேசாகத் தாக்கும் என்பதையே நீங்கும் என்பதற்குப் பொருளாகக் கொள்க.


முப்பொருளியல்பு:

திருமுதுகுன்றப் பதிகமாகிய `மத்தாவரை நிறுவி' என்ற பதிகத்துள் `விளையாததொர் பரிசில் வரு பசு' என்ற பாடலால் ஒருகாலத்தே தோன்றி விளையாதனவாயுள்ளவற்றை அறிவிக்கிறார். ஒன்று பசு - உயிர். இரண்டு பாசம் -

ஆணவம். மூன்று வேதனை - நல்வினை, தீவினை யாகிய இருவினை. நான்கு ஒண்தளை - மாயை. ஐந்துபாசமாகிய ஆணவம்; ஆறு இவை உயிரைப் பற்றாமல் தவிருமாறு அருள்கின்ற தலைவனாகிய சிவன். இவன் முதுகுன்றத்தில் எழுந்தருளியுள்ள பழமலைநாதன் என்றருள்கின்றார். அப்பாடல் வருமாறு:


"விளையாததொர் பரிசில்வரு பசு,பாச,வே தனை,ஒண்
தளை,யாயின தவிரஅருள் தலைவன்,னது சார்பாம்
களை யார்தரு கதிராயிரம் உடைய அவனோடும்
முளைமாமதி தவழும்உயர் முதுகுன்றடை வோமே."

திருக்கழுமலத் திருப்பதிகமாகிய "சேவுயரும்" என்னும் பதிகத்துள் `புவிமுதல் ஐம்பூதமாய்' என்னும் பாடலில் சைவ சித்தாந்தத்துள் காணும் 24 தத்துவங்களையும் மிக எளிமையாகக் குறிப்பிட்டுள்ளமை கண்டு மகிழலாம்.


ஆன்ம தத்துவம்:

மண், நீர், தீ, வெளி, காற்று ஆகிய ஐம்பூதங்களும், அவற்றின் நுட்பமாயுள்ள சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்து புலன்களும், (தன்மாத்திரை) இவை தோன்றுதற்கு வாயிலாக உள்ள ஞானேந்திரியங்களாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற அறிவுப் பொறிகள் ஐந்தும்; வாக்கு, பாதம், கை, எருவாய், கருவாய் என்னும் தொழிற்பொறிகள் ஐந்தும்; அந்தக் கரணங்கள் எனப்படும் மனம், புத்தி, சித்தம் அகங்காரங்களாகிய உட் கருவிகள் நான்கும் ஆக இருபத்துநான்கும் ஆன்மாவிற்கு (உயிர்க்கு) உடலாக அமைந்து அறிவு, இச்சை செயலுடன் உயிர் தொழிற்படத் துணை செய்வனவாம். இக்கருத்தமைந்துள்ள பாடல் பகுதி காண்க.


"புவிமுதல்ஐம் பூதமாய்ப், புலன் ஐந்தாய்,
நிலன் ஐந்தாய்க், கரணம் நான்காய்
அவையவைசேர் பயன்உருவாய் அல்லஉரு
வாய்நின்றான் அமருங்கோயில்"

நிலன் ஐந்தாய் என்பது அறிவுப்பொறி ஐந்திற்கும் தொழிற் பொறி ஐந்திற்கும் இடமாய் நிற்பதால் நிலன் ஐந்தாய் என்றாரேனும் பத்தாகக் கொள்க.

பச்சைப் பதிகம்:

"போகம் ஆர்த்த பூண்முலையாள்" என்னும் திருநள்ளாற்றுத் திருப்பதிகம் சிவநெறிக்கு உயிர்ப்பளித்த சிறப்புடையது. சைவரும், சமணரும் அவரவர் தெய்வம் பற்றிய உண்மையை எழுதி அனலில் இடச்செய்தபோது ஞானசம்பந்தர் தாம் முன்பே பாடிய ஓலைச் சுவடி யில் கயிறுசாத்திப் பார்த்தார்; " போகமார்த்த" எனும் இப்பதிகம் கிடைத்தது. இதனைத் தீயில் இட்டு மேலும்"தளிரிள வளரொளி" என்னும் பதிகம் பாடினார் ஞானசம்பந்தர். `போகமார்த்த' எனும் ஏடு எரியாமல் பச்சென்றிருந்தது. அதனால் இப்பதிகத்தை இன்றும் பச்சைப் பதிகம் என்றே குறிப்பிடுகின்றனர். இதில் என்ன உண்மை சொன்னார் ஞானசம்பந்தர் என்று காண்போம்.


சிவபருமான் போகவடிவம், வேகவடிவம், யோகவடிவம் என்னும் மூவகை வடிவம் கொள்வதை இப்பதிகத்துள் உணர்த்து கின்றார். போகியாயிருந்து உயிர்கட்குப் போகத்தைத் தருகின்றார். வேகியாய் இருந்து அவரவர் செய்த வினைகளை வீட்டி அருள் கின்றார். யோகியாயிருந்து முத்தியை அருள்கிறார். இப்பதிகத்துள் இம்முத்திறக் குறிப்பும் அமைந்துள்ளமையைக் காணலாம். உயிர்கள் அநுபவிக்க இருக்கும் போகத்தைப் பாலாக அம்மை தமது மார்பகத்தில் உள்ள முலைத்தடத்தால் உலகஉயிர்கட்கு வழங்குகிறார் என்னும் குறிப்பு மருத்துவ இயலாரும் வியந்துபோற்றும் சிறப்புடைய தாகும். தாய்ப்பால் இல்லையேல் ஜீவராசிகளுக்கு வாழ்வே இல்லை. அனைத்துச் சீவர்களும் நோய்க்கே இருப்பிடமாவர் என்பது புலன் ஆதல் அறிக. தாய்ப்பாலில்தான் நோய்த் தடுப்பாற்றல் மிகுதியாக வுள்ளது. குழந்தைகட்கு ஓராண்டுக் காலம் தாய்ப்பால் வழங்கினால் சொட்டுமருந்து எதுவும் தேவையில்லை.


தன்னைப்போல் ஆக்குபவன்:


`பந்தத்தால்' எனத்தொடங்கும் திருக்கழுமலத் திருப்பதிகத் துள், ஏழாம் பாடலில் மூன்றாம் வரியில் `திகழ்ந்தமெய்ப்பரம்பொருள், சேர்வார்தாமே தானாகச்செய்யுமவன் உறையுமிடம்' என்று அருளி யுள்ளமை சிந்திக்கத்தக்கது. இறைவனைச் சார்கின்ற உயிர்கட்கு இப் பிறவிக்கு வேண்டிய சுகபோகங்களைக் கொடுப்பதுடன் படிப்படியாக உயர்த்தி அவ்வுயிர்களைத் தானாகவே செய்யும் பெருங்கருணை யாளன் என்பதை இப்பாடலில் உணர்த்துகின்றார்.


இதேகருத்தை அப்பர் பெருமானும், திருப்புள்ளிருக்கு வேளுர்த் திருத்தாண்டகமாகிய `இருளாய உள்ளத்தின்' என்ற பாடலில் `தெருளாத சிந்தைதனைத் தெருட்டித், தன்போல் சிவலோக நெறி அறியச் சிந்தை தந்த அருளானை' என்று அருள்கின்றார். எனவே மும்மலக் கட்டுண்டுள்ள உயிர்களை இறைவன் தன்னைப்போல் ஆக்குதற்கு இவ்வுலகத்தைப் படைத்துக் காத்து அழித்து அருள்புரிகின் றான் என்பது நன்கு விளங்குகின்றதன்றோ!

உள்ளமே கோயில்:

`அகனமர்ந்த அன்பினராய்' எனத்தொடங்கும் திருவீழிமிழலை மேகராகக் குறிஞ்சிப்பண்ணிலுள்ள பாடலில், இறைவன் எத்தகைய உள்ளத்தில் எழுந்தருளியிருப்பான் என்பதைத் தெளிவு படுத்தியுள்ளார். அகத்தில் - உள்ளத்தில் அன்பும் அறுபகை களை தலும், ஐம்புலன் அடக்கலும் உளதாயவழியே உண்மைஞானம் கைவரப் பெறுவர். அத்தகையோர் உள்ளத்தாமரையிலேயே இறை வன் குடியிருப்பான் என்கிறது இப்பாடல். அது வருமாறு:


"அகனமர்ந்த அன்பினராய் அறுபகை செற்று
ஐம்புலனும் அடக்கிஞானம்
புகலுடையோர் தம்உள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும்
புராணர் கோயில்."

இப்பாடலில் இறைவனைப் புராணர் என்று குறிப்பிட்டு உள்ளமை அறிந்து மகிழத்தக்கது. புரா - நவம் என்ற இருசொல்லே புராணம் என்றாயிற்று. புராதனம் என்பதன் முதல்பகுதி பழமை குறிப்பது. நவம் என்பது புதுமை குறிப்பது. எனவே புராணம் என்பது பழமைக்குப் பழமையாய் புதுமைக்குப் புதுமையாய் இருப்பவன் பரம் பொருள் என்பதை உணர்த்துவது. இவ்வாறு பல அரிய கருத்துக்களை உள்ளடக்கிய முதல் திருமுறை,

"இன்னெடு நன்னுலகெய் துவரெய்திய போகமும்
முறுவர்கள் இடர்பிணி துயரணைவ் விலரே"


என நிறைவு பெறுகிறது.

முதல் திருமுறையின் முடிவுப் பதிகம் " மாதர் மடப்பிடியும் " என்னும் திருத்தருமபுரப் பதிகம். இது முதல் திருமுறையின் பலன் சொல்வது போல் முடிந்திருப்பது திருவருட் பொருத்தமாகும். இறைவனின் பிணை, துணை, கழல்களை விரும்பிப் போற்றுபவர், நெடுநன்னுலகெய்துவர் என்றதனால் வீடுபேறு அடைவர் என்கிறார். இது இன்ப ஆக்கம். இடர், பிணி, துயர் அணைவிலர் என்றதனால் துன்ப நீக்கம் குறித்தாராயிற்று.

திருவடியைக் குறிக்கும்போது, பிணை-துணை-கழல்கள் என எழுவாயை மூன்றாகக் குறித்ததற்கேற்பப் பயனிலையையும் இடர்-பிணி-துயர் என மூன்றாகக் குறித்துள்ளமை காண்க.


இடர்-விபத்தினால் வரும் துன்பம்; பிணி-உடலில் நோயால் வரும் துன்பம்; துயர்-மனத்தைப் பற்றிய துன்பம். இம்மூன்றும் அகலும் என்கிறார்.


நிறைவுரை:

இன்னோரன்ன அரிய பல கருத்துக்களேடு ஞானக் கருவூலமாக விளங்கும் திருஞானசம்பந்தர் அருளிய இம்முதல் திருமுறை ஸ்ரீலஸ்ரீ கயிலைக்குருமணியின் அருளாட்சிக் காலத்தில் 1953 ஆம் ஆண்டு தருமை ஆதீனப் புலவர் மகாவித்துவான், பத்ம பூஷண், முனைவர். திரு. ச. தண்டபாணி தேசிகரைக் கொண்டு எழுதிய விளக்கக் குறிப்புரையுடன் ஸ்ரீ குருஞானசம்பந்தர் குருபூசை விழா மலராக வெளிவந்தது.


இதுபோது பன்னிரு திருமுறைகளையும் ஒளியச்சில் ஒருசேர அச்சிட்டு வெளியிடும் முறையில் தருமை ஆதீனப் புலவர், திருநெறிச் செம்மல் திரு. வி.சா. குருசாமி தேசிகரைக் கொண்டு எழுதிய பொழிப்புரை, செந்தமிழ்க்கலாநிதி, பண்டித வித்துவான் திரு. தி.வே. கோபாலய்யரைக் கொண்டு எழுதிய உரைத்திறம் ஆகியவற்றுடன், பன்னிரு திருமுறைகளை உரையுடன் வெளியிட வித்திட்ட ஸ்ரீலஸ்ரீ கயிலைக்குருமணியின் குருபூசை வெள்ளிவிழா நினைவாக வெளி யிடப் பெறுகிறது.


அன்பர்கள் ஓதி உணர்ந்தும், பிறர்க்குரைத்தும் இம்மை மறுமை அம்மை என்னும் மும்மை நலங்களும் பெற்று இனிது வாழச் செந்தமிழ்ச் சொக்கன் திருவருளைச் சிந்திக்கின்றோம்.


வாழ்க சிவநெறி! வளர்க திருமுறை! வாழ்க உலகெலாம்!





Thursday, June 14, 2012

தருமை ஆதீனம் இயற்றிவரும் பணிகள்

                                                                        உ

                         
                             
                          தருமை ஆதீனம் இயற்றிவரும் பணிகள்

1. தேவாரப் பாடசாலை நிறுவித் தெய்வத் தமிழ் வளர்ப்பது.

2. வேத சிவாகம பாடசலை வைத்துத் திருக்கோயில் பூசை முறைகளைப் பயிற்றுவிப்பது.

3. திருமுறைகள், சித்தாந்த சாத்திரங்கள், சைவ சமய நூல்கள் பலவற்றைத் தெளிவுற அச்சிட்டு வழங்குவது.

4. தேவாரத் தலங்கள் தோறும் வழிபாடுகள் நிகழ்த்தி அவ்வத்தலத் தேவாரத்தைப் புராண வரலாறுகளுடன் அச்சிட்டு வழங்குவது.

5. ஆலயங்கள் பலவற்றிலும் நிகழும் பெருவிழாக்களில் சமய விரிவுரைகள், மாநாடுகள் நிகழ்த்திச் சமய தத்துவங்களை மக்கட்கு உணர்த்துவது.

6. தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, கலைக்கல்லூரி அமைத்து மாணவர்களுக்குக் கல்வி நலம் தருவது.

7. அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி மையம் நிறுவி அதன் வாயிலாகக் கடல் கடந்த நாடுகளிலும் நம் நாட்டிலும் வாழும் சமயம் சார்ந்த மக்கட்குச் சைவசமயப் பெருமைகளை அறிவுறுத்துவதோடு சென்னை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் மாலை நேரக் கல்லூரி நடத்தி வருவது.

8. உயர்நிலைப் பள்ளிகள் கலைக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ் மொழியை ஊக்கத்தோடு பயிலப் பரிசுகள் வழங்குவது.

9. ஞானசம்பந்தம் என்னும் மாத இதழ் நடத்தி அதன் வாயிலாக மக்கட்குச் சமய உண்மைகளை உணர்த்தி வருவது.

10. ஆதீனத்தின் அருளாட்சியிலுள்ள 27 திருக்கோயில்களையும் தூய்மையாகப் பரிபாலித்து நாள்வழிபாடு சிறப்புவழிபாடுகள் நிகழ்த்திவருவது.

11. ஆதீனக் கோயில்கள் பலவற்றில் நூலகங்கள் அமைத்தும் மாலைநேரத்தில் ஓதுவாமூர்த்திகளைக் கொண்டு குழந்தைகட்குத் திருமுறை வகுப்புக்கள் நடத்தியும் உதவுவது.


12. சமய நூல்களை ஆய்வு நோக்கோடு எழுதி வெளியிட முன்வருவோர்க்கு உதவுவது.

13. ஆதீனத்திருக்கோயில்களில் பழுதடைந்த கட்டிடப் பகுதிகளை இடித்துப் புதுப்பித்தும் 12 ஆண்டுகட்கு ஒருமுறை மூர்த்திகட்கு அஷ்டபந்தனம் சாத்தியும் திருக்குட நீராட்டு விழா நடத்துவது.

14. ஆதீனத் திருமடத்தில் பெரியதொரு நூலகம் அமைத்துப் பழைமையான ஓலைச்சுவடிகளையும் நூல்களையும் பேணி வருவது.

15. கல்வி பயிலும் ஏழை மாணவர்கட்குக் கல்விக் கட்டணம் புத்தகங்கள் வழங்கி உதவுவது.

16. மயிலாடுதுறையில் மகப்பேறு மருத்துவ நிலையம் அமைத்து நகராட்சிக்கு உதவியதுபோலச் சிங்கிப்பட்டி காசநோய் மருத்துவமனை சென்னை அடையாறு கான்சர் இன்ஸ்டியூட் போன்ற பொது நிறுவனங்களுக்கும் பெருந்தொகை உதவி வருவது.


17. ஆதீனக் குரு முதல்வர் குரு பூசைவிழாவில் சமய வகுப்புக்கள் கருத்தரங்குகள் திருநெறிய தெய்வத் தமிழ் மாநாடு முதலியன நடத்திவருவது.


18. அவ்வப்போது மக்கட்கு எல்லாச் சமய தத்துவங்களையும் மாநாடுகள் மூலம் உணர்த்திப் பொதுவாக அனைத்துச் சமய தத்துவங்களையும் மக்கள் அறியும்படிச் செய்வது.

19. தமிழ்நாட்டின் தலைநகராகிய சென்னையில் சமயப் பிரசார நிலையம் அமைத்துச் சமய வகுப்புக்கள் நடத்தியும், ஆதீனத்திருக் கோயில்களில் நிகழும் சிறப்பு விழாக்களின் பிரசாதங்களை அங்குள்ள மக்கட்கு வழங்கியும் வருவது.


20. திங்கள் தோறும் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் பொதுமக்கட்கு அருளாசி வழங்குவது.

21. திருவாமூரில் அப்பருக்குத் திருக்கோயில் எடுப்பித்துத்
திங்கள்தோறும் திருமுறைமுற்றோதல், விரிவுரை நிகழ்த்தியும் ஆண்டுதோறும் குருபூசையைச் சிறப்புற நடத்தியும் வருவது.


22. பெண்ணாகடத்தில் மெய்கண்டாருக்குக் கோயில் எடுத்து ஆண்டுதோறும் குருபூசையைச் சிறப்புற நடத்துவது.

23. சித்தர் காட்டில் ஸ்ரீ சிற்றம்பல நாடிகள் கோயில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நிகழ்த்தி, சமயச்சொற்பொழிவு, ஆண்டுதோறும் குருபூஜை நடத்தி வருவது.

24. சீகாழியில் திருமுலைப்பால் விழாவிலும், திருவாமூரில் சதய விழாவிலும் திருமுறை இசைவாணர்கட்குத் திருமுறைக் கலாநிதி பட்டம் பொறித்த பொற்பதக்கமும் ஆயிரம் ரூபாய் பணமுடிப்பும் வழங்கிவருவது.

25. ஆதீனச் சிறப்பு விழாவாகிய ஆவணி மூல நாளில் பழுத்த தமிழ்ப்புலமை பாலித்த தமிழறிஞர்க்குச் சிறப்புப் பட்டம் வழங்கி வருவது.

26. சிதம்பரம் திருக்கோயிலில் சமயாசாரியர்களோடு சந்தானாசாரியரைப் பிரதிட்டை செய்வித்து அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நிகழ்த்தியதுடன் ஆண்டுதோறும் குருபூசை விழாக்களைக் கொண்டாடி வருவது.

27. இல்லங்கள் தோறும் திருமுறை முற்றோதல் செய்விப்பது.

28. சிவராத்திரி கார்த்திகைச் சோமவாரம் போன்ற நாள்களில் அன்பர்கட்குச் சமய விசேடதீட்சைகள் அளிப்பது.

29. மதுரையில் உள்ள ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்தர் திருமடத்தில் அவ்வப்போது சமயச் சொற்பொழிவுகள் நடத்தி வருவது.

30. ஆதீன ஆலயங்களுக்கு மட்டும் அன்றிப் பிற ஆலயங்களுக்கும் திருப்பணி நிதி உதவி அளித்தல் - யாகசாலைச் செலவை ஏற்று நடத்துதல் முதலியன செய்து வருவது.

31. திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையார் கோயில் நம்பி ஆண்டார் நம்பிகள் குருபூஜை விழாவை நடத்துவது.

32. ஸ்ரீ குருஞானசம்பந்தர் பணி மன்றம் நிறுவி அதன் வாயிலாக மயிலாடுதுறையில் மழலையர்பள்ளி, செகண்டரிப் பள்ளி ஆகியன நடத்துவதோடு பிற ஊர்களிலும் இம்மன்றச் சார்பில் பள்ளிகள் மருத்துவ நிலையங்கள் அமைத்துச் சமூகத் தொண்டுகள் முதலியன செய்து வருவது.



* * * * *


வாழ்த்து

வையம் நீடுக மாமழை மன்னுக

மெய் விரும்பிய அன்பர் விளங்குக

சைவ நன்னெறி தான்தழைத் தோங்குக

தெய்வ வெண்திரு நீறு சிறக்கவே.

- பெரிய புராணம்.



வான்முகில் வழாது பெய்க

மலிவளம் சுரக்க மன்னன்

கோன்முறை அரசு செய்க

குறைவிலாது உயிர்கள் வாழ்க

நான்மறை அறங்கள் ஓங்க

நற்றவம் வேள்வி மல்க

மேன்மைகொள் சைவ நீதி

விளங்குக உலக மெல்லாம்.

- கந்தபுராணம்.


மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம்

பல்குக வளங்கள் எங்கும் பரவுக அறங்கள் இன்பம்

நல்குக உயிர்கட் கெல்லாம் நான்மறைச் சைவம் ஓங்கிப்

புல்குக உயிர்கட் கெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க.

- திருவிளையாடற் புராணம்.



திருவார் கமலைப் பதிவாழ்க அப்பதி

சேரும்நின்றன்

மருவார் மரபும் திருநீறும் கண்டியும்

வாழ்கஅருட்

குருவாகும் நின்றன் திருக்கூட்டம் வாழ்கநற்

கோநிரைகள்

தெருவாழ் தருமைத் திருஞான சம்பந்த


தேசிகனே.


- ஆதீன அருள் நூல்.

Wednesday, June 13, 2012

தமிழ் வளர்த்த தருமையாதீனம் 4

தமிழ்மணி - அருள்நெறித் தமிழ் வளர்த்த அடிகளார்


சேதுபதி



"அடிகளார்" என்பது துறவியைக் குறிக்கும் ஒரு பழந்தமிழ்ச் சொல். எனினும், அப்பெயர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஒருவரையே குறிக்கும் சிறப்புப் பெயரானது தனி வரலாறு.

தமிழகத்துத் தஞ்சைத் தரணியில் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருவாளப்புத்தூருக்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும் கிராமத்தில் சீனிவாசப் பிள்ளை - சொர்ணத்தம்மாள் தம்பதிக்கு, 1925ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கநாதன். அவருக்கு முந்திப் பிறந்த சகோதரர் இருவர்; சகோதரி ஒருவர்.

அப்போது அவன், நான்காம் வகுப்பு பயிலும் சிறுவன். வழக்கறிஞரும், தமிழ்ப்பேராசிரியருமான "சொல்லின் செல்வர்" இரா.பி.சேதுப்பிள்ளையின் வீட்டில், அவரது அறையின் ஜன்னல் முன் நின்று தினம் ஒரு திருக்குறள் ஒப்பித்துக் காலணா பெறுவது அரங்கநாதனின் வழக்கம். இவ்வாறு அரங்கநாதனின் வாழ்வை உயர்த்திய திருக்குறள், பின்னாளில் அடிகளாரான அவருக்குப் பொதுநெறி ஆகியது. இதே போல, அரங்கநாதனின் பிஞ்சு உள்ளத்தில் தீண்டாமை விலக்கு உணர்வும், மனிதநேயப் பண்பும் குறிக்கோள்களாகப் பதியக் காரணமானவர் அருள்திரு விபுலானந்த அடிகள் ஆவார்.


பள்ளி இறுதி வகுப்புவரை படித்த அரங்கநாதன், தருமபுர ஆதீனத்தில் கணக்கர் வேலை இருப்பதை அறிந்து 1944ஆம் ஆண்டு அப்பணியில் சேர்ந்தான். 1945 - 48 கால இடைவெளியில் முறைப்படி தமிழ் கற்று வித்துவான் ஆனதும் அங்கேதான். அத்திருமடத்தின் 25ஆவது பட்டமாக வீற்றிருந்த தவத்திரு சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அரங்கநாதனைத் துறவுக்கு ஆட்படுத்திக் கந்தசாமித் தம்பிரான் ஆக்கினார்கள்.


1945ஆம் ஆண்டு தருமபுர ஆதீனத்தின் கட்டளைத் தம்பிரானாக நியமனம் பெற்ற கந்தசாமித் தம்பிரான், சமயம் தொடர்பான பல பணிகளைத் திறம்பட ஆற்றினார். அவர் தருமையாதீனத்தின் சார்பில், குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீன குருபூஜை விழாவொன்றில் பங்கேற்றுச் சொற்பொழிவாற்ற நேர்ந்தது. கந்தசாமித் தம்பிரானின் நாவன்மையால் கவரப்பட்ட குன்றக்குடித் திருமட ஆதீனகர்த்தர் திருப்பெருந்திரு ஆறுமுக தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முறைப்படி தருமையாதீனத்திடம் இசைவுபெற்றுத் தமது திருமடத்துக்கு ஆதீன இளவரசராகக் கந்தசாமித் தம்பிரானை ஆக்கினார்.


அப்போது தெய்வசிகாமணி "அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்" என்ற திருப்பெயரும் அவருக்குச் சூட்டப்பட்டது.


1949ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி ஆதீன இளவரசராகிய அவர், 1952 ஜூன் 16ஆம் தேதி முதல் அத்திருமடத்தின் தலைமைப் பொறுப்பேற்று, 45ஆவது குருமகா சந்நிதானமாக விளங்கினார். பின்னர் தம் பணிகளால், அடிகளார் ஆகி, ஊர்ப்பெயர் இணைய, "குன்றக்குடி அடிகளார்" என்று மக்களால் சிறப்புடன் அழைக்கப்பட்டார். தவத்திரு அடிகளார் ஆதீனப் பொறுப்பேற்ற காலம், இந்து மதத்திற்கு மிகவும் சோதனையான காலம். இறைமறுப்புப் பிரசாரங்களால் தாக்குதலுக்கும், கண்டனத்துக்கும் உரியதாக இந்து மதம் ஆயிற்று. இதன் எதிர்கால விபரீதங்களை மனதில் எண்ணிய அடிகளார், காலத்திற்கேற்ப, இந்து மதத்தின் உன்னத சீலங்களைப் புரியவைக்கும் முயற்சியில் இறங்கினார். இதன்பொருட்டு 1952 ஆகஸ்ட் 11ஆம் தேதி சமயச் சான்றோர்களையும், பெருந் தமிழறிஞர்களையும் குன்றக்குடியில் ஒன்றுதிரட்டிப் பெரும் மாநாடு ஒன்றை நடத்தினார். அதன்விளைவாகத் தோன்றியதே "அருள்நெறித் திருக்கூட்டம்".


1954 ஜூலை 10ஆம் தேதி இதன் முதல் மாநாடு தேவகோட்டையில் மூதறிஞர் இராஜாஜி தலைமையில் நடைபெற்றது. பின்னர் முழு வீச்சோடு செயல்பட்ட இவ்வியக்கத்தின் கிளைகள் தமிழகம் மட்டுமல்லாது, இலங்கையிலும் கிளைத்தன. அதன் செயலாக்கப்பிரிவாக "அருள்நெறித் திருப்பணி மன்றம்" எனும் அமைப்பும் 1955 ஜூன் 10ஆம் தேதி கிளைத்தது. அப்போதைய தமிழக அரசின் துணையோடு தமிழ்நாடு "தெய்வீகப் பேரவை" எனும் அமைப்பு, 1966இல் முகிழ்த்தது. தருமை ஆதீன குருமகா சந்நிதானம் தலைமையேற்ற இப்பேரவையில் அவருக்குப்பின், 1969 முதல் 1976 வரை அடிகளார் தலைமையேற்று அரும்பணிகள் பல ஆற்றினார்.


பேச்சுக்கு நிகராக, எழுத்திலும் வல்லவரான அடிகளார், தம் வாழ்நாளில் ஏராளமான நூல்களை எழுதியதோடு,



மணிமொழி

தமிழகம்

அருளோசை

முதலிய இதழ்களையும் நடத்தினார்.


அவர் தோற்றுவித்து, இன்றளவும் வந்துகொண்டிருக்கும் "மக்கள் சிந்தனை"யும், "அறிக அறிவியல்" இதழும் குறிப்பிடத்தக்கன.


தமது சமய, சமுதாயப் பணிகள் மூலம் உலகை வலம்வந்த மகாசந்நிதானம், அடிகளார் ஒருவர்தாம்.

வெளிநாடுகள் பலவற்றுக்கும் சென்று வந்தார் அடிகளார். அவர் மேற்கொண்ட அந்த மேலைநாட்டுப் பயணங்கள், அவரைத் தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தூதுவராகவும், அங்குள்ள தமிழ் மக்களின் வளர்ச்சிக்குத் துணைபுரிபவராகவும் ஆக்கின. இவ்வாறு, அவர் 1972இல் சோவியத்தில் மேற்கொண்ட பயணத்தின் விளைவாக தோன்றியது தான் "குன்றக்குடி கிராமத்திட்டம்".


திருக்குறளின் ஆழத்தையும், அழகையும், செறிவையும் உள்வாங்கிய அடிகளாரின் எழுத்துகள் தமிழ் இலக்கிய உலகில் தனித்தன்மை கொண்டமைவன.

திருவள்ளுவர்

திருவள்ளுவர் காட்டும் அரசியல்

திருவள்ளுவர் காட்டும் அரசு

குறட்செல்வம்

வாக்காளர்களுக்கு வள்ளுவர் தொடர்பான அறிவுரை

திருக்குறள் பேசுகிறது

குறள்நூறு

ஆகியன அடிகளார் அருளிய திருக்குறள் தொடர்பான நூல்களாகும்.



சமய இலக்கியத்திற்கு அடிகளார் அளித்த கொடைகளாக அமைவன,

அப்பர் விருந்து

அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர்

திருவாசகத்தேன்

தமிழமுது

சமய இலக்கியங்கள்

நாயன்மார் அடிச்சுவட்டில்

உள்ளிட்ட நூல்களாகும்.


ஆலய சமுதாய மையங்கள் என்னும் நூல், தமிழக அரசின் முதற்பரிசு பெற்ற நூல்.


அந்த வரிசையில் வைத்துப் போற்றத்தக்க நூல், "நமது நிலையில் சமயம் சமுதாயம்".


சமரச சமய நெறியாளர்களுக்கு உரிய ஆன்மிக இலக்கியமாக அடிகளார் அருளிய "திருவருட்சிந்தனை". நாள் வழிபாட்டுக்குரிய "தினசரி தியான நூல்".



பெரியபுராணத்தோடு, சிலப்பதிகாரத்தையும், கம்பராமாயணத்தையும் ஆராய்ந்து அடிகளார் எழுதிய நூல்கள்,


சிலம்பு நெறி

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

ஆகியனவாகும்.

சங்க, சமய இலக்கியங்களோடு நின்றுவிடாமல் சமகால இலக்கியத்திலும் ஆழ்ந்த புலமையுடைய அடிகளார், "பாரதி யுக சந்தி", "பாரதிதாசனின் உலகம்" ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.


அவர்தம் சிறுகதைகள், அறிவொளி இயக்கத்தின் மூலமாக மக்களைச் சென்றெய்தியது. அதுபோல் அடிகளார் அரங்கத்தலைமையேற்றுப் பாடிய கவிதைகள், "கவியரங்கில் அடிகளார்" என்னும் நூலாகியிருக்கிறது.


அவர்தம் சுயசரிதையென அமைவது, "மண்ணும் மனிதர்களும்" எனும் நூலாகும். சில நாடகங்களும் அடிகளாரால் எழுதப்பெற்று அரங்கேற்றம் ஆகியிருக்கின்றன.


சிறுபொழுதும் ஓய்வின்றி, உலக நலனுக்காகத் துடித்த அடிகளாரின் இதயம் 1995ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி தமது துடிப்பை நிறுத்திக்கொண்டது. ஆயினும் அவர் ஆற்றிய அருட்பணிகள், தொடங்கிய தூய இயக்கங்கள் இன்னும் தொடர்ந்து விரிந்து வளர்கின்றன. அவர்தம் நிறைவுக் காலத்தில் "தினமணி"யில் தொடராக வெளிவந்த "எங்கே போகிறோம்?" என்ற கட்டுரைகள் இன்றைக்கும் வழி காட்டுவன!


நன்றி:- தினமணி