Monday, June 11, 2012

பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி
வாழி திருநாவலூர் வன் தொண்டர் பதம் போற்றி
ஊழி மலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி

- ஸ்ரீ உமாபதி சிவாசாரியார் சுவாமிகள்.


உரகா பரணத் திருமார்பும், உமைஒப் பனையாள் இடப்புறமும்,
சிரமா லிகையும் புரிசடையும், செய்ய வாயும் கறைமிடறும்,
வரதா பயமும் மழுமானும், வயங்கு கரமும் மலரடியும்,
கருவா புரியான் வெளிப்படுத்திக், காட்சி கொடுத்து நின்றானே.

- ஸ்ரீ சைவ சிரோண்மணி ஞான வரதுங்க ராம பாண்டியர்




தனையறியார் ஈசன்றனையறியார் பாச
வினையறியார் ஆனந்தமேவார் - தனையறியுஞ்
சிட்டர்தமக் கில்லாத தீங்குரைப்பர் பொல்லாத
துட்டர்தமக் குள்ள தொழில்." -

ஸ்ரீ-ல-ஸ்ரீ குருஞான சம்பந்த சுவாமிகள்

1 comment:

  1. Please request the WebMaster to secure this website (http://dharmapurammadaalayam.blogspot.com/) with HTTPS protocol May the Dharmapuram Aadheenam have great Spiritual Influence on many many generations to come!

    ReplyDelete